states

ரூ.500 கோடி ஆவின் பாக்கி

ஈரோடு, டிச.2- பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நந்தனம், ஆவின் நிர்வாக அலுவலகம் முன் ஜனவரி 9 அன்று காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் மாநில தலைவர் கே.முகமது அலி தலைமையில் ஈரோடு டிபிஎம் நினைவகத்தில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். சங்கத்தின் பொது செயலாளர் பி.பெருமாள், பொரு ளாளர் ஏ.எம்.முனுசாமி, மாநில நிர்வாகிகள் எம்.சங்கர், எஸ்.தீர்த்த கிரி, கே.சி.ராமசாமி, வெண்மணி சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு:  தமிழ்நாடு அரசு 3 வருடங்களு க்குப் பின் பாலுக்கு 1 லிட்டருக்கு ரூ.3 மட்டுமே கொள்முதல் விலை யை உயர்த்தி ரூ.35 என்று அறி வித்திருக்கிறது. ரூ.10 கொள்முதல் விலை கோரி தொடர்ந்து போராடி  வந்த நிலையில் ரூ.3 மட்டுமே உயர்வு  என்ற அரசின் அறிவிப்பு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  2 மாதங்கள்  வரை பாலுக்கு ஆவின் நிர்வாகம் பாக்கி வைத்துள்ளது. ரூ.500 கோடி வரை பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் பாக்கி வைத்துள்ளது. உட னடியாக பாக்கிகள் முழுவதையும் வழங்கிட வேண்டும். பாலுக்கு கொள்முதல் விலை உயர்வு அறிவிப்பிற்குப் பின்  சமீபத்தில் கால்நடை தீவனங் களின் விலை கடுமையாக உயர்ந்துள் ளது. உதாரணத்திற்கு கோதுமை தவிடு (பூசா) 35 கிலோ ரூ.850லி ருந்து ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது. தீவனக்குச்சி ரூ.1100லிருந்து ரூ.1300 ஆகியுள்ளது. இதர வகை தீவ னங்கள் ரூ.1350லிருந்து ரூ.1800 வரை விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆவின் தீவனம் மொத்த தேவையில் 5 விழுக்காடு கூட கால்நடை தீவனத்தில் பூர்த்தி செய்யவில்லை.

கொள்முதலை உயர்த்துக!

தற்போது ஆவினின் பால் கொள்முதலில் எவ்வித உயர்வும் ஏற்படவில்லை. தொடர்ந்து குறைந்து கொண்டுதான் வரு கிறது. எனவே, ஆவினுக்கு பால்  வழங்குபவர்களுக்கு ஊக்கத் தொகை 1 லிட்டருக்கு ரூ.4 வழங்க  வேண்டும். முதல் அமைச்சர் குழந்தைகள் சத்துணவு திட்டத்தில், தமிழ்நாடு அரசு பாலையும் சேர்த்து வழங்க  வேண்டும். இதன்மூலம் தினம் 10 லட்சம் லிட்டர் பால் விற்பனை யை அதிகப்படுத்திட முடியும். ஆரம்ப சங்கங்களின் செயல்பாடு களுக்கு தற்போது ரூ.1.25 தான் வழங்கப்படுகிறது. எனவே, ஆவின் நிர்வாகம் 50 காசுகள் உயர்த்தி ரூ.1.75 என வழங்கிட வேண்டும்.

கால்நடைத் தீவனம்

பால் உற்பத்தியாளர்களையும், ஆரம்ப சங்கங்களையும் பாது காத்திட கால்நடை தீவனங்களுக்கு மானியம் வழங்கிட வேண்டும். முத லில் கால்நடைத்துறையின் மூலம்  தீவனத்திற்கு மானியம் வழங்கப் பட்டது. பிறகு ஆவினின் மாவட்ட ஒன்றியங்கள் 1 கிலோவிற்கு ரூ.4, ரூ.2 என மானியம் வழங்கியது. தற் போது அரசு பால் உற்பத்தியாளர்  களுக்கு மானியம் வழங்கிட வேண்டும். பால் திருட்டு நடப்பதை உடனே தடுத்து நிறுத்திட வேண்டும். பால் கேன்களை ஒன்றிய பால் வண்டி களில் ஏற்றும்போதே பாலில் உள்ள சத்துக்களையும், அளவையும் குறித்துக் கொடுத்திட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு கடந்த 2017ஆம் ஆண்டு இது சம்பந்தமாக ஒரு  உத்தரவிட்டது. ஆரம்ப சங்கங்களி லிருந்து பால் கேன்களை ஏற்றும்போதே பாலில் உள்ள சத்துக்களையும், அளவையும் குறித்துக் கொடுத்திட வேண்டும் என தீர்ப்பளித்தது. தமிழ்நாடு அரசு,  இதற்கான கட்டமைப்பை 6 மாதத் தில் ஆவினுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் உத்தர விட்டது. இதுவரை அமல்படுத்த வில்லை. காலம் தாழ்த்தாமல் உடன டியாக அமல்படுத்த வேண்டும். 

சத்துக்கள் விதி

பாலில் உள்ள எஸ்என்எப் (இதர சத்துக்கள்) கணக்கெடுப்ப தற்கு பால் கொள்முதலில் மட்டும் எம்ஆர்எப் (Modified Richman  Formula) விதி பயன்படுத்தப்படு கிறது. மற்ற மாநிலங்களில் கொள்முதல் விற்பனை இரண்டி லும் ஐஎஸ்ஐ விதிமுறையே பயன் படுத்தப்படுகிறது. எம்ஆர்எப் விதி  முறையில் பால் உற்பத்தி யாளர்களுக்கும், ஆரம்ப சங்கங் களுக்கு 1 லிட்டருக்கு ரூ.2, ரூ.3 வரை விலை குறைப்பு ஏற்படுகிறது. பல  ஆண்டுகளாக ஆவின் நிர்வாகத்தில் இந்த அநீதியே தொடர்கிறது. எனவே, ஐஎஸ்ஐ விதியை பயன்படுத்திட வேண்டும். ஆவினில் நிர்வாக சீர்திருத்தம் செய்து செலவுகளைக் கட்டுப் படுத்திட வேண்டும். ஆரம்ப சங்க பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி பாதுகாத்திட வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் அனை வருக்கும் போனஸ், ஊக்கத் தொகை வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 9ஆம் தேதி சென்னை ஆவின் நிர்வாக அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.