மைக்ரோசாப்ட் கோளாறு இந்தியாவில் விமானப் போக்குவரத்து சீரானது
மைக்ரோசாப்ட் தொ ழில்நுட்ப பிரச்சனை யால் வெள்ளியன்று உலகம் முழுவதும் ஐடி மற்றும் விமான போக்குவரத்து சேவை முடங்கியது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, தைவான், ஐக்கிய அரபு அமீரகம், கனடா உள்பட பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்தியாவில் கொல்கத்தா, தில்லி உள்ளிட்ட நகரங்களில் விமானப் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், “சனியன்று அதிகாலை முதல் விமான நிலையங்களில் விமான சேவை வழக் கம் போல் செயல்படத் தொடங்கியது” என ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள் ளது. இந்த அறிக்கையில்,”பயணத்திட்ட மாற்றம், பணத்தை திருப்பியளித்தல் ஆகி யவற்றை உறுதி செய்யும் வகையில் விமான சேவை நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களின் செயல்பாடுகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகி றோம். எனினும் மைக்ரோசாப்ட் கோளாறு பிரச்சனையில் கொஞ்சம் பின்னடைவு கள் உள்ளன” என கூறப்பட்டுள்ளது.
தேர்வு மையம் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது என்டிஏ
நீட் தேர்வு முறைகேட்டால் எத்தனை மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்பதை கண்டறிய தேர்வு மையம் வாரியாக முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு (என்டிஏ) உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. உச்சநீதி மன்ற உத்தரவுப்படி தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு முடிவுகளை நக ரங்கள், தேர்வு மையம் வாரியாக சனி யன்று பிற்பகல் வெளியிட்டது. மேலும் பீகார் மாநிலம் பாட்னா, குஜராத் மாநி லம் கோத்ராவில் மட்டுமே நீட் முறை கேட்டால் மாணவர்கள் பலனடைந்துள்ள னர் என்றும், டெலிகிராம் செயலி மூலம் நீட் வினாத்தாள் விற்பனை நடந்துள்ள தால் பல நகரங்களிலும் மாணவர்கள் பல னடைந்ததாகவும் தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.
மேட்டூர் அணை: 62 அடியைத் தாண்டியது
சேலம், ஜூலை 20- மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக் கிழமை காலை விநாடிக்கு 53 ஆயிரத்து 098 கன அடி யாகவும், பிற்பகலில் 60 ஆயி ரம் கன அடியாகவும் அதி கரித்தது. நீர்வரத்து தொட ர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக ஜூலை 16 அன்று காலை 43.83 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் சனிக்கிழமை காலை 61.31 அடியாக உயர்ந்துள்ளது. 4 நாட்களில் மட்டும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 17.48 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 25.67 டிஎம்சியாக உள்ளது.
சிபிசிஐடி முன்பு பாஜக நிர்வாகி ஆஜர்
விழுப்புரம், ஜூலை 20- விஷச்சாராய விவகாரத் தில் அவதூறு பரப்பிய புகா ரில், பாஜக மாநிலச் செயலா ளர் எஸ்.ஜி. சூர்யாவுக்கு சிபி சிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன் படி பாஜக மாநிலச் செய லாளர் எஸ்.ஜி. சூர்யா, விழுப் புரம் சிபிசிஐடி அலுவலகத் தில் சனிக்கிழமையன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் போலீசார் விசா ரணை நடத்தினர்.
வங்கதேசத்தில் வன்முறை தமிழர்களுக்கு உதவ முதல்வர் உத்தரவு!
சென்னை, ஜூலை 20- வங்கதேசத்திலுள்ள தமி ழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு தேவைப் படும் அனைத்து உதவிகளை யும் விரைந்து வழங்க முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வங்கதேசத்தில் தற் போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமி ழர்கள் சிலர் தாயகம் திரும்ப இயலாமல் அங்கு சிக்கியி ருப்பதாக தகவல்கள் வரப் பெற்றுள்ளன. இந்நிலையில், வங்க தேசத்தில் உள்ள தமிழர் களின் விவரங்களைப் பெற்று, அவர்களுக்கு தேவைப் படும் அனைத்து உதவிக ளையும் விரைந்து வழங்கிடு மாறு தமிழ்நாடு முதலமைச் சர் மு.க. ஸ்டாலின் அயல கத் தமிழர் நலன் மற்றும் மறு வாழ்வுத்துறை ஆணையர கத்திற்கு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் அயல கத் தமிழர் நலத்துறையின் 24x7 கட்டணமில்லா உதவி எண்கள் “1800 309 3793, வெளிநாடு: 80 6900 9900 ஆகியவற்றையும், ‘அரசுச் செயலாளர், பொது மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு எண்: 80 6900 9901’-ஐயும் தொடர்பு கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது.