இந்திய மருத்துவப் பிரதிநிதிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (FMRAI) தில்லியின் ஜந்தர் மந்தரில் தொழிலாளர்களுக்கு எதிரான 4 தொழிலாளர் சட்டத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும், அனைத்து மருந்துப் பிரதிநிதிகளையும் பணியாளர்களாக கருத வேண்டும், வேலை நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், பணியின் போது சேவை விதிமுறைகளை நிர்ணயம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தை நடத்தியது.