சென்னை, மே 19- சென்னையில் இயக்கப்படும் மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர் சாதன பேருந்துகளில் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் முன்னாள் எம்எல்.சி.க்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்குமாறு நடத்துநர்களுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனாலும், இதில் பல்வேறு புகார்கள் வந்ததால் அதை சரிப்படுத் தும் வகையில் நடத்துனர்களுக்கு மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. அதன்படி, தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்கள், பேரவை முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் மேலவை உறுப்பினர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோர் தனியாகவோ, மனைவி, கணவர் அல்லது உதவியாளருடன் சட்டப் பேரவை செயலகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் வரும் போது, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர் சாதன பேருந்து களில் கட்டண மில்லாமல் பயணிக்க ஓட்டுநர், நடத்துநர்கள் அனுமதிக்க வேண்டும். எந்த புகாரும் வராமல் நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.