states

வரலாற்றைத் திருத்தி எழுதுவதற்குப் பின்னால் தீயநோக்கம் - கே.ஏ.வேணு கோபாலன்

“பிரிட்டிஷ் ஆதிக்கக் காலத்திய சதித்திட்டத்தின் ஒருபகுதியாக எழுதப்பட்ட வரலாற்றைத்தான் சுதந்திரத்திற்குப் பின்னரும் கற்றுத்தரு கிறார்கள். சுதந்திரத்திற்குப் பிறகு, நம்மை அடிமைப்படுத்தியவர்கள் வகுத்த நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்ய வேண்டியது அவசி யமாக இருந்தது. ஆனால் அது செய்யப்பட வில்லை. அதனால் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை  மாற்றி எழுத வேண்டி வரும்” என்றார் பிரதமர் நரேந்திரமோடி. இந்தியாவின் வரலாறு என்பது அடிமைத்தனம் பற்றியதாக மட்டுமே உள்ள தல்ல என்றும், எழுச்சிப் பெற்ற வெற்றியைப் பற்றியும், எண்ணற்ற மகான்களின் வீரதீரச் செயல்களைப் பற்றியதாகவும் உள்ளது என்றும் பிரதமர் கூறினார். அசாம் மாநில அரசு தில்லி விஞ்ஞான பவனில் நடத்திய அஹோம் இராணுவத் தலைவர் லச்சித் பர்ஃபுக்கானின் 400-ஆவது பிறந்த நாள்  விழா நிகழ்ச்சியில் பிரதமர் நிறைவுரை யாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்தி யாவின் வரலாற்றைத் திருத்தி எழுத வேண்டும் என்றார்.  தாய் நாட்டுக்காகப் போராடுவதற்கு முன் மாதிரியான வீரத்தை வெளிப்படுத்திய மகத்தான 30 இந்திய சாம்ராஜ்யங்களையும், 30 மாவீரர்களையும் குறித்த ஆய்வு நடத்த வேண்டுமென வரலாற்று மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார். மத்திய காலகட்டத்தின் இறுதியில் பிரம்மபுத்திராவின் அடிவாரத்தில் நிலை பெற்றிருந்த மன்னர் பரம்பரையைச் சேர்ந்த வராக இருந்தார் அஹோம். முகலாயர்க ளைத் தோல்வியுறச் செய்து, ஒளரங்கசீப்பின் சாம்ராஜ்ய விரிவாக்கத்தைத் தடுக்கவும் செய்த அஹோம் சைன்யத்தின் தளபதி யாக இருந்த பர்ஃபுக்கனின் நினைவைப் புதிய தலைமுறையினர்க்குக் கொண்டு சேர்ப்பதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப் பட்டது. ஒளரங்கசீப்புக்கு எதிராகப் போரா டிய அஹோம் என்ற குறுநில மன்னனின் சேனைத் தளபதியாக இருந்த லச்சித் பர்ஃபுக்கனின் 400-ஆவது பிறந்த நாள் விழாவை அசாம் மாநில அரசு கொண்டா டியது.

லச்சித் பர்ஃபுக்கன் சுதந்திரப் போராளி யாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும் சித்தரிக்கப்படுகிறார். இந்தியாவில் பிறந்து வளர்ந்த மன்னர்தான் ஒளரங்கசீப். அவரது தந்தையின் தாத்தாவாகிய பாபர் தான் இந்தியா மீது தாக்குதல் நடத்தி இந்தியாவுக்குள் நுழைந்தார். அதற்கு இந்து குறுநில மன்னர்களின் ஆதரவு கிடைத்தி ருந்தது. பிரிட்டிஷ்காரர்களைப் போல் முகலாய மன்னர்கள் இந்தியாவைக் கொள்ளைய டித்து செல்வங்களை அந்நிய நாட்டுக்குக் கொண்டு போகவில்லை. இந்தியப் பிரதே சங்களை அடிமைப்படுத்திய அவர்கள் இந்தியர்களாகவே இந்தியாவை ஆட்சி செய் தார்கள் என்பது மட்டுமல்ல, ஒளரங்கசீப் தவிர மற்ற யாரும் மதநல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிப்பவர்களாக இருக்க வில்லை. ஒளரங்கசீப்புக்குக்கூட குறுநில இந்து மன்னர்களில் ஒரு பிரிவினரின் ஆதரவு கிடைத்தது என்பதையும் பார்க்கா மல் இருக்க முடியாது. பிரிட்டிஷ்காரர்க ளும் இந்திய மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றுவதற்கு அரசாங்க ரீதியிலான எந்த முயற்சியும் செய்யவில்லை. ஏகாதிபத்தியம் என்பது கலாச்சார முறையிலான ஆதிக்க மாக இருக்கவில்லை. மாறாக, அதை பொரு ளாதார ரீதியிலான ஆதிக்கமாகவே இந்தி யாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியப் போராளிகள் கண்டனர். ஆனால், அந்தக் கண்ணோட்டம் ஆர்எஸ்எஸ்-க்கோ, இந்து மகாசபைக்கோ இருக்கவில்லை. அவர்கள் பல சமயங்களிலும் பிரிட்டிஷ்காரர்களின் கூட்டாளிகளாகவே செயல்பட்டனர்.

‘இங்க்லண்ட்ஸ் டெப்ட் டு இந்தியா’ என்ற புகழ் பெற்ற தமது நூலில் சுதந்திரப் போராட் டத் தளபதியாகிய  லாலா லஜ்பத் ராய், பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவிலிருந்து கொள்ளை கொண்டு போன செல்வங்க ளின் கணக்குகளை விவரித்துக் கூறியிருந் தார். அவ்வாறான ஒரு கொள்ளையும் முக லாய மன்னர்கள் நடத்தியதில்லை. ஆனா லும், இந்திய வரலாற்றைத் திருத்தி எழுது வதன் மூலம் அவர்களை முக்கிய எதிரிகளா கக் கூறவும், பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்டத் தின் மேன்மையைக் குறைத்து மதிப்பி டவுமே சங்பரிவார்கள் உத்தேசித்துள்ளனர். “இந்தியாவை விடுதலை செய்யும் போ ராட்டத்தில் ஆவேசமுடன் ஏராளமானோர் பங்கேற்றிருக்கிறார்கள். பிரிட்டிஷார் நாட்டைவிட்டு வெளியேறியவுடன் இந்த ஆவேசம் குறைந்துவிட்டது. உண்மையில் இந்த விஷயத்தில் இவ்வளவு அதிகமாக ஆவேசமடைந்திருக்க வேண்டியதில்லை. நாம் நினைவில் வைக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நமது சபதத்தில் நாம் சொன்னது மதத்திற்கும், கலாச்சாரத்திற் கும் தடையாக உள்ள நாட்டின் சுதந்தி ரத்தைப் பற்றியாகும்.  இதில் எந்த இடத்தி லும் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டுமென்று கூறவில்லை.” (ஸ்ரீ குருஜி ஸமாச்சார் தர்சன்).  சுதந்திரம் பற்றிய ஆர்எஸ்எஸ்காரர்க ளின் கனவு பிரிட்டிஷ்காரர்களை இந்தியா விலிருந்து வெளியேற்றுவதாக இருக்க வில்லை என்பதையே அவர் விளக்கியி ருக்கிறார். சுதந்திரம் என்பது இந்து மதத் தையும், இந்துக் கலாச்சாரத்தையும் மற்ற மதங்களின் தாக்குதலிலிருந்து காப்பாற்று வதாக இருக்க வேண்டும் என்பதே சுதந்தி ரம் குறித்த தங்களின் சிந்தனையாக உள்ளது என்பதையே இதன் மூலம் கோல் வால்கர் தெளிவாக்கினார்.

இதே நிலைபாட்டையே இப்போதும் ஆர்எஸ்எஸ் பின்பற்றுகிறது. தேசத்தை பொருளாதார  அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துப் பாதுகாப்பது என்பதைவிட, அவர்கள் பாதுகாக்க விரும்புவது இந்து மதத்தின் வலிமையைத்தான். இந்து மதத்தையும் இந்துக் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்காக நடைபெற்ற போராட் டங்களை தேச சுதந்திரத்திற்கான போராட் டங்களாக உயர்த்திக் காட்டவும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட் டத்தை மறைக்கவுமே அவர்கள் விரும்பு கிறார்கள். இதைத்தான் இன்று இந்திய ஆளும் வர்க்கமும் விரும்புகிறது. பொருளா தாரச் சுரண்டல் ஒரு விவாதப் பொருளாக ஆகாமலிருப்பது அவர்களின் பொதுவான வர்க்க நலனுக்குத் தேவையானதாகும். வர்க்கப் போராட்டம் விவாதப் பொருளாக ஆகாமலிருக்கவும், தனது அரசியலும், மதவாத அரசியலும் விவாதப் பொருளாக ஆகவும் செய்தால் சுரண்டப்படும் மக்கள் ஒன்றுபடுவதும் போராடுவதும் பலவீனமா கும். மாற்று அரசியல் உருவாகி வருவதும் தடுக்கப்படும். அதனால்தான், இன்றைய நவீன தாராளமய காலத்தில் முதலா ளித்துவம் என்பது மதவாத, சாதியவாத, சுயநல அரசியல், இனவாத அரசியல் எல்லாம் கொண்டதாக பெருமளவில் அதி கரித்துக் கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாகத்தான் இந்தியாவின் வரலாறு  திருத்தி எழுதும் வேலை நடக்கவிருக்கிறது.

நன்றி: ‘சிந்தா வாரிக’  மலையாள வார இதழ் (16.12.2022),  தமிழில்: தி.வரதராசன்