states

ராமரோ, அனுமனோ பாஜகவைச் சேர்ந்தவர்கள் அல்ல; இந்து தர்மத்தை பாஜக குத்தகைக்கும் எடுக்கவில்லை!

கொல்கத்தா, ஜூலை 9- லீனா மணிமேகலையின் ‘காளி’ ஆவணப்படத்தின் போஸ்டரை வைத்து, பாஜக அரசியல் செய்து வரும் நிலையில், அதற்கு எதிராக மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த திரி ணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறார். இந்த விஷயத்தில், தங்களுக்கும் மொய்த்ராவுக்கும் சம்பந்தமில்லை என்று அவர் சார்ந்த திரிணாமுல் காங்கி ரஸ் கட்சி ஒதுங்கிக் கொண்டாலும், துணிச்சலுடன் பாஜகவை மஹூவா மொய்த்ரா எதிர்த்து நிற்கிறார். ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை, தனது ‘காளி’ பட போஸ்  டரை, காளி வேடமணிந்த பெண், கை யில் சிகரெட் மற்றும் தன்பாலின உற வாளர்களின் ‘வானவில்’ கொடியை ஏந்தியபடி இருப்பது போன்று வடிவ மைத்திருந்தார். இதற்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் கடும் எதிர்ப்பைக் கிளப்பினர்.  அப்போது, மஹூவா மொய்த்ரா எம்.பி. “மதுவோ, இறைச்சியோ இரண்  டையுமே ஏற்கும் தெய்வம்தான் காளி” என்று லீனா மணிமேகலைக்கு ஆத ரவுக்குரல் எழுப்பினார். அதைத் தொடர்ந்து சங்-பரிவாரங்கள் தங்களின்  அவதூறு பட்டியலுக்குள் மஹூவா மொய்த்ராவையும் கொண்டு வந்த னர். 

மேற்குவங்கத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜிதேன் சாட்டர்ஜி அளித்த புகாரின் பேரில், மஹூவா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் மொய்த்ரா பாஜகவினருக்கு அஞ்சாமல் பதிலடி கொடுத்து வரு கிறார்.  இந்நிலையில் வங்கமொழி ஊட கம் ஒன்றுக்கு மஹூவா மொய்த்ரா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில்,  இந்து தர்மங்கள் ஒன்றும் பாஜகவுக்கு  குத்தகைக்கு விடப்படவில்லை என்று  மீண்டும் காட்டமாக விளாசியெடுத்துள் ளார். இதுதொடர்பாக பேட்டியில் அவர்  மேலும் கூறியிருப்பதாவது:

“மேற்குவங்கம் போன்ற நாட்டின்  பல்வேறு பகுதிகளில் பல நூற்றாண்டு களாக கடவுளை வழிபடுவதில் இந்துக்  கள் தங்கள் சொந்த சடங்குமுறை களைப் பின்பற்றி வருகின்றனர். ஆனால், வட இந்தியாவில் தெய்வங் களை வழிபடும் முறைகளின் அடிப்ப டையில் பாஜக தனது சொந்த கண் ணோட்டத்தை, நாட்டின் பிறபகுதி மக்க ளிடம் திணிக்க முயற்சிக்கிறது. அந்த  முயற்சியை பாஜக நிறுத்த வேண்டும். தற்போதைய வழிமுறையை பின் பற்றித்தான் 2,000 ஆண்டுகளாக நாங்  கள் காளியை வழிபட்டு வருகிறோம். காளிக்கு குறிப்பிட்ட வழியில் எப்படி  பூஜை செய்ய வேண்டும் என்று கற்பிக்க  பாஜக யார்? இந்து தா்மத்தை அந்தக் கட்சி குத்தகைக்கு எடுத்துள்ளதா, என்ன? பாஜக ஒன்றும் இந்து தெய் வங்களின் பாதுகாவலர் அல்ல! இஸ்லாமிய இறைத்தூதா் நபிகள் நாயகம் குறித்து பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி யுள்ளது. அந்த விவகாரம் மீதான கவ னத்தை மாற்றி, பிரச்சனையை எனக்கு  எதிராகத் திருப்ப பாஜக முயற்சிக்கிறது. என் மீது பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் வழக்குப் பதிவு செய் யப்பட்டுள்ளது. ஆனால், காளிக்கு அளிக்கப்படும் படையல்கள் குறித்து நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்  கல் செய்ய முடியுமா என்று அந்த மாநில  அரசுகளுக்கு நான் சவால் விடுக்கி றேன். அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் வணங்கப்  படும் கடவுளுக்கு காணிக்கையாக என்ன வழங்கப்படுகிறது என்பதை அசாம் மாநில முதல்வரால் நீதிமன் றத்தில் எழுத்துப்பூர்வமாக விளக்க முடி யுமா?

பாஜக ஆளும் இதர மாநிலங்களில் உள்ள காளி கோயில்களில் அளிக்  கப்படும் காணிக்கைகள் குறித்து அந் தந்த மாநிலங்களின் முதல்வா்களால் விளக்க முடியுமா? அந்தக் கோயில்  களில் கடவுளுக்கு மது படைக்கப்படுவ தில்லையா? இந்துத்துவம் குறித்த பாஜகவின் செயல்திட்டம் மற்றும் இறுக்கமான கண்ணோட்டங்களைப் பிறர் மீது திணிக்க முயற்சி நடக்கிறது. அதனை  எதிர்த்து நாட்டின் நலனுக்காகப் பேசிய தன் மூலம் நான் முதிர்ந்த அரசியல்வாதி யாக செயல்பட்டதாகவே கருதுகிறேன். மேற்கு வங்கத் தேர்தலின்போதே பாஜக இந்துத்துவா அரசியலைத் திணிக்க முயன்றது. ஆனால் வாக்கா ளர்களால் அது புறக்கணிக்கப்பட்டது. காளியை எப்படி வழிபட வேண்டும் என்பதை பாஜக கற்றுக் கொடுக்கக் கூடாது. காளி பக்தையாக காளியை எப்படி வழிபட வேண்டும் என்று எனக்குத் தெரியும்”. இவ்வாறு மஹூவா மொய்த்ரா தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.