ஆந்திராவைச் சேர்ந்த 31 வயதான ஆட்டோ டிரைவர் மதுபாபு கர்லபதி தனது குழந்தை களை படிக்க வைக்க கிட்னியை விற்றுள்ளார். ஆனால் ஆப்பரேஷனுக்கு பிறகு உறுதியளித்தபடி பணம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இந்தச் சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
“மத வேறுபாடின்றி திருமணமான அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் குற்றவியல் நடைமுறைத் சட்டம் பிரிவு 125இன் கீழ் கணவரிட மிருந்து ஜீவனாம்சம் பெற முஸ்லிம் பெண்களுக்கு உரிமையுண்டு” என்று உச்சநீதிமன்றம் புதனன்று தீர்ப்பளித்தது.
பெண்ணாக இருந்து ஆணாக மாறிய மூத்த ஐஆர்எஸ் அதிகாரியின் பாலின மாற் றத்தை ஒன்றிய நிதி அமைச்சகம் ஏற்றுக் கொண் டுள்ளது. இந்திய குடிமைப் பணி சேவை வர லாற்றில் முதல் முறையாக இது போன்ற சம்பவம் நடந்துள்ளதாக என ஒன்றிய அரசு அறிவிப்ப்பு வெளியிட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை காவல்படை சோதனையில் 3 பேரிடம் இருந்து 108 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிரிகாப்லே என்ற இடத்தில் 108 கிலோ தங்கக் கட்டிகளுடன் 3 பேரை இந்தோ- திபெத் எல்லை காவல்படை கைது செய்தது.
ஊட்டியில் குதிரைப் பந்தய மைதானத்தை அரசு கையகப்படுத்தியது செல்லும் என மெட்ராஸ் ரேஸ் கிளப்பின் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரூ.822 கோடி குத்தகை தொகையை செலுத்தாத தால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி மைதானத்தை அரசு கையகப்படுத்தியிருந்தது என்பது குறிப்பி டத்தக்கது.
ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சி யில் மின்துறையில் மக்களுக்கும், அர சுக்கும் ரூ.1,29,503 கோடி இழப்பு ஏற்பட்டது என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளை அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் பள்ளி மாண வர்களை ஏற்றி சென்ற வேன் திடீரென தீ பிடித்து எரிந்தது. வேனின் முன்பகுதியில் இருந்து புகை வருவதை பார்த்ததும் ஓட்டுநர் உடனடியாக நிறுத்திய நிலையில், பொதுமக்கள், வேனில் இருந்த மாணவர்களை விரைந்து கீழே இறக்கி பெரும் விபத்தை தவிர்த்தனர். இந்த தீ விபத்தில் பள்ளி வேன் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.