திருவனந்தபுரம், ஆக.31- லோக்ஆயுக்தாவுக்கு நீதித்துறை அதி காரம் இல்லை என்றும், அது விசாரணை அமைப்பு மட்டுமே என்றும் கேரள சட்ட அமைச்சர் பி.ராஜீவ் கூறினார். லோக் ஆயுக்தா சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் மேலும் பேசுகையில், லோக்ஆயுக்தா ஒரு நீதி அமைப்பு என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும், இதை லோக்ஆயுக்தா நீதிமன்றத்துக்கு இணையா கக் கருதக் கூடாது என்று உயர் நீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார். கேரள லோக்ஆயுக்தா சட்டத்தில் அரச மைப்புக்கும் சட்டத்திற்கு முரணான ஒரு விதி உள்ளது. 23 வருடங்களாக நடந்து வந்த ஒரு தவறான சட்ட அமைப்பு தற்போது திருத்தப் பட்டு வருகிறது. நாட்டின் லோக்பால் மற்றும் மாதிரி லோக்ஆயுக்தா சட்ட முன்மொழிவுக்கு இணங்க, கேரள லோக்ஆயுக்தா சட்டத்தை திருத்தும் பணியை சட்டமன்றம் மேற்கொண் டுள்ளது. இது பேரவையின் அதிகாரமும் உரி மையும் ஆகும்.
எதிர்க்கட்சிகளால் முன்மாதிரியாகக் கூறப்படும் கர்நாடக லோக் ஆயுக்தா சட்டம், லோக் ஆயுக்தா அறிக்கையை நிராகரிக்க முதல்வருக்கு நேரடியாக அதிகாரம் அளிக்கி றது. இந்தச் சட்டத்தை நிறைவேற்று உத்தரவு மூலம் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா மீற முயன்றார். காங்கிரஸ் நாட்டை ஆண்ட போது 2011 இல் லோக்பால் மசோதா மக்கள வையில் நிறைவேற்றப்பட்டது. 2013ஆம் ஆண்டு வரை மாநிலங்களவையில் இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தும் வேகம் காங்கி ரஸுக்கு கிடைக்கவில்லை. 2013இல், மாநி லங்களவை ஒப்புதல் அளித்தும், லோக்பால் அமைக்க துணியவில்லை. ஊழலில் சிக்கித் தவித்த அரசை இரும்புக்கரம் கொண்டு தடுக் கும் முயற்சியின் ஒரு பகுதியாக லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சி செய்த மகாராஷ்டிரா, ஆந்திரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநி லங்களில் லோக் ஆயுக்தா சட்டத்தின் வரம்பிற் குள் ‘முதல்வர்’ கொண்டு வரப்படவில்லை. லோக்பால் மசோதாவுடன் கொண்டு வரப்பட்ட மாதிரி லோக் ஆயுக்தா சட்டத்தின் அடிப்படை யில் 17 மாநிலங்கள் சட்டங்களை உருவாக்கி, நாடாளுமன்றத்தின் தேர்வுக் குழுவால் மாநிலங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள ளன. இவை அனைத்திலும் லோக் ஆயுக்தா அறிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரி நிரா கரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கேரள லோக்ஆயுக்தா சட்டத்தில் மட்டும், மறுப்பு தெரிவிக்க உரிமை இல்லை, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மேல்முறையீடு செய்யும் வாய்ப்பை மறுப்பதன் மூலம் அடிப்படை உரிமை மீறல் உள்ளது. சட்டத் திருத்தம் கூடாது என்ற வாதம் சிறுபிள்ளைத்தனமானது. இந்திய அரச மைப்புச் சட்டம் 103 முறை திருத்தப்பட்டுள் ளது. நாடாளுமன்றம் உருவாவதற்கு முன்பே அரசமைப்பு திருத்தம் தொடங்கியது என்பது வரலாறு. ஒரு கட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தில் மாற்றங்களோ அல்லது திருத் தங்களோ தேவைப்பட்டால், அதை நிறை வேற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.