டிச. 29ல் நடைபெறும் : சிபிஎம் அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி, டிச.22 - உயிர்பலி வாங்கும் துவாக்குடி சுங்கச்சாவடியை மூட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரி வித்திருப்பதாவது: திருச்சி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரையிலான சுமார் 14 கி.மீ தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட போது, 4 வழி சுங்க கட்டண சாலைக்கான விதிகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக குடியிருப்புகள், தொழிற்சாலைகள், பள்ளி-கல்லூரிகள் நிறைந்த பகுதியில் 2006 ஆம் ஆண்டு சர்வீஸ் சாலை அமைக்காமல், தெருச் சாலைகளின் இருபுறமும் நூற்றுக் கணக்கான இடங்களில் தேசிய நெடுஞ்சாலை நேரடியாக இணையும் வகையில், பலரின் எதிர்ப்பையும் மீறி ஆபத்தான முறையில் சில கட்டிட உரி மையாளர்களின் நலனுக்காக நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. இதன் விளைவாக அரியமங்கலம், காட்டூர், கைலாஷ் நகர், திருவரம்பூர், பெல், துவாக்குடி பகுதி பொதுமக்கள், தொழிலாளர்கள் தினமும் விபத்தில் சிக்கி உயிர் பலியாவதும், பல ஆயிரம் பேர் நிரந்தர உடல் ஊனத்திற்கு ஆளா வதும் தொடர் கதையாகி உள்ளது. மேற்கண்ட சாலையில் வாகனம் ஓட்டு வோர் உயிரோடு வீடு திரும்புவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில்தான், இப்பகுதி மக்களின் வாழ்க்கை இருக்கிறது. இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு முதல், சர்வீஸ் ரோடு கூட்டமைப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசு சர்வீஸ் சாலை அமைப்பதை ஏற்றுக் கொண்டு தேவையான நிலங்களை கையகப்படுத்த அரசாணை மற்றும் அறிவிக்கை வெளியிட்டது.
இந்த அரசாணையை தொடர்ந்து, நீண்ட காலம் சர்வீஸ் சாலை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தொடர்ச்சியான போராட்டம் மற்றும் 15.10.2019 ஆம் ஆண்டு 6 மாத காலத்திற்குள் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், 25.9.2020 முதல் 16.12.2021 வரை உள்ளூர் நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் கையகப்படுத்தும் நிலம் மற்றும் கட்டிடங்களுக்கு தேவை யான இழப்பீட்டை வழங்கி, நிலங் களை எடுத்து தேசிய நெடுஞ்சாலை க்கு வழங்காமல் காலம் தாழ்த்தி வரு கிறது தமிழக அரசு. மேலும் சட்ட மன்ற தேர்தலில் ஆளும் திமுக அரசால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை. உடனடியாக 6 மாத காலத்திற்குள் சர்வீஸ் சாலை அமைத்து அப்பகுதி மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்ற உத்தரவையும் அமல்படுத்த மறுப்பது, மனித உயிர்களோடு விளையாடும் செயலாகும். எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நிலம் கையகப்படுத்தும் பணியை துவக்கிட வேண்டும்.
இந்த பிரச்சனைகளுக்கு மூல காரணமான 4 வழி சுங்கச்சாலை விதி கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக திருச்சி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சுமார் 14 கி.மீ தூரம் சர்வீஸ் சாலையே அமைக்கா மல், வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்வதை ஏற்க இயலாது. எனவே மேற்படி 14. கி.மீ.க்கு சர்வீஸ் சாலை அமைத்து விட்டு சுங்க கட்ட ணம் வசூலிக்க வேண்டும். அதுவரை துவாக்குடி சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும். ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியானதற்கு யார் பொறுப்பு எனக் கேட்டு, டிசம்பர் 29 ஆம் தேதி காலை 10 மணிக்கு துவாக்குடி அருகில் உள்ள சுங்கச்சாவடியை இழுத்து மூடும் போராட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.