states

இலங்கைத் தமிழர்களுக்கு பொருட்களை அனுப்ப ஏற்பாடு செய்க: மு.க.ஸ்டாலின்

சென்னை,ஏப்.15- இலங்கைத் தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தர வேண்டும் என்றும்  யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடு தலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்  ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பினார். 

அவர் அனுப்பிய  கடிதத்தில், கடந்த 31-3-2022 அன்று பிரதமரை சந்தித்தபோது, இலங்கையில் ஏற் பட்டுள்ள பொருளாதார நெருக்கடி யைக் கருத்தில் கொண்டு ​​இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான அத்தி யாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாடு அரசு வழங்கத் தயாராக உள்ளது  எனத் தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள் ளார். மேலும் கடந்த 7-4-2022 அன்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருடனான தமது தொலைபேசி உரையாடலின்போது, பொருளாதார நெருக்கடியின் காரண மாக இலங்கைத் தமிழர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாட்டிற்கு வந்து  கொண்டிருப்பதை தான் தெரிவித்த போது, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் உரிய ஆலோ சனை செய்து, அதற்குப் பிறகு இது  தொடர்பான நடவடிக்கைகள் குறி த்துப் பரிசீலிக்கலாம் என்று ஒன்றிய  அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிரு ந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.  

உணவு மற்றும் பிற அத்தியா வசியப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு ஒன்றிய அரசு அனுமதித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ள இந்தத் தருணத்தில், தூத்துக்குடி துறை முகத்தில் இருந்து உணவு தானி யங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் களை, கடுமையான உணவுத் தட்டுப் பாட்டால் சிக்கித் தவிக்கும் இலங்கை யின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி களிலும், தலைநகர் கொழும்பில் வாழும் இலங்கைத் தமிழர்களுக் கும், தோட்டங்களில் பணிபுரிந்து வரு வோருக்கும் பொருட்களை அனுப்பு வதற்கு தமிழ்நாடு அரசு உறுதியோடு உள்ளது என்றும்  இலங்கையில் நில வும் இத்தகைய மோசமான நிலைமை யைக் கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 23-3-2022 ஆம் தேதி கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர் களின் துயர நிலை குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பு வதாகத் தெரிவித்துள்ள முத லமைச்சர்,  மீனவர்கள் கைது தொடர்பான வழக்கினை விசாரித்த கிளிநொச்சி நீதிமன்றம், பிணையில் செல்ல ஒரு மீனவருக்கு இலங்கை ரூபாயில் 2 கோடி செலுத்திவிட்டு, தனிப்பட்ட பிணையில் ஜாமீனில் விடு விக்கப்படலாம் எனத் தெரிவிக்கப் பட்டதைக் குறிப்பிட்டும், மீனவர் களால் அவ்வளவு பெரிய பிணைத்  தொகையைச் செலுத்த இயலாத கார ணத்தினால், 12-5-2022 வரை அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர் என்றும், இவ்விஷ யத்தில் ஒன்றிய வெளியுறவுத் துறை  அமைச்சர் உடனடியாகத் தலை யிட்டு, சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவி களை உறுதி செய்திடவேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தியுள் ளார்.