மார்க்சிஸ்ட் கட்சி வாழ்த்து
சென்னை, ஏப்.22- ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன் னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: மனித சமுதாயத்தின் அறிவு வளர்ச்சி யில் முக்கிய பங்கை வகிக்கும் மொழியை யும், கல்வியையும் அடுத்தடுத்த தலை முறைகளுக்கு கடத்திச் செல்லும் தன்னி கரற்ற ஊடகமாக புத்தகங்கள் அமைந் துள்ளன. புத்தகங்களை காலத்தின் விதை நெல் என்று அழைத்தார் பாவேந்தர் பாரதி தாசன். புரட்சிப் பாதையில் நிகரற்ற ஆயு தங்களாக புத்தகங்களை கண்டார் மாமேதை லெனின். தூக்குமேடை ஏறும் தறுவாயில் புத்தக வாசிப்பில் இருந்தார் மாவீரன் பகத்சிங். ஒரு மனிதனுக்கு ஓரா யிரம் வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பினை இலக்கியங்களும், கவிதைகளும் உருவாக்குகின்றன. புத்தக வாசிப்பு நமக்குள்ளாக ஒரு புதிய உலகை திறப்பதோடு, நிதானமாகவும் உண்மையை பகுத்தாய்ந்து புரிந்து கொள்ளவும் வழி வகுக்கிறது. உலக புத்தக தினம் என்பது கொண் டாட்டங்களோடு முடிந்து விடக் கூடிய ஒன்றல்ல. புதிய உலகின் கதவுகளை திறக்கும் அறிவுச்சாவிகளே புத்தகங்கள் என்பதை உணர்ந்து வாசிப்பை பர வலாக்குவோம். புத்தகங்களை எட்டுத் திக்கும் கொண்டு சேர்ப்போம். எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள், வாசகர்கள் அனை வருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் உலக புத்தக தின வாழ்த்து களை உரித்தாக்குகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.