சென்னை, ஏப்.30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தி வருமாறு: உலகத் தொழிலாளர் தினமான மே தினத்தை கொண்டாடும் கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் தமிழக உழைப்பாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இந்தியாவில் 1923 ஆம் ஆண்டு முதல்முறை யாக சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்கள் மே தினத்தை கொண்டாடிய 100 ஆவது ஆண்டு மே தினம் என்ற வகையில் இந்த மே தினம் வரலாற்றுச் சிறப்பினை பெறுகிறது. இந்தியாவில் சுரண்டலற்ற சமூகத்தை அமைக்க வும், மதவெறி, சாதிவெறி சக்திகளை புறக்கணித்து உழைப்பாளி மக்களின் ஒற்றுமையை பாதுகாத்திட வும், சமூக ஒடுக்குமுறை, பாலியல் வன்முறை மற்றும் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களை எதிர்த்தும், ஒன்றிய அரசு கடைப்பிடிக்கும் கார்ப்ப ரேட் மய இந்துத்துவா கொள்கைகளை எதிர்த்தும் ஒன்றுபட்ட வலுமிக்க போராட்டங்களை முன்னெ டுக்கவும் இந்த மே தின நன்னாளில் உறுதியேற்க வேண்டுமென அனைத்து உழைப்பாளிகளையும் கட்சியின் மாநிலக்குழு வேண்டுகிறது
கடந்த இரண்டாண்டு காலமாக உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பெருந்தொற்றை கையாள்வதிலும், அதிலிருந்து மக்களைப் பாது காப்பதிலும் முதலாளித்துவ நாடுகள் தோல்வி அடைந்தன. ஆனால் சோசலிச நாடுகளே இதில் மாபெரும் வெற்றி பெற்றன. கொரோனாவுக்கு முன்பும் பின்பும் உலகில் நீடித்து வரும் பொருளா தார நெருக்கடிகளின் சுமைகளை உழைக்கும் வர்க்கத்தின் மீது மடைமாற்றிவிட்டுள்ள முதலா ளித்துவ சக்திகள், மிகப்பெரும் அளவிற்கு கொழுத்த லாபத்தை அடைந்துள்ளன. தீவிரமடையும் பொரு ளாதார, சமூக சுரண்டல்களுக்கு எதிராகவும், அடக்கு முறைகளுக்கு எதிராகவும் உலகம் முழுவதிலும் பாட்டாளி வர்க்கம் வலுவான போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்தியாவில் மார்ச் 28 - 29 தேதிகளில் தொழிலாளர் வர்க்கமும் அதற்கு ஆதரவாக விவசாயி கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் வர்க்கமும் நடத்திய 25 கோடி பேர் பங்கேற்ற பிரம்மாண்டமான பொது வேலைநிறுத்தம் இதற்கோர் சான்றாகும்.
நாட்டின் ஒட்டுமொத்த வளங்களையும், செல் வங்களையும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு வாரி வழங்கி வருகிறது. இந்தியப் பொரு ளாதாரத்தை முற்றாக சீர்குலைத்து ஏழை, எளிய மக்களின் துயரங்களை அதிகரித்து வருகிறது. அதிலிருந்து மக்களைத் திசைதிருப்புவதற்காக சாதி, மொழி, மத ரீதியாக மக்களை பிளவுபடுத்துகிற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதோடு, திட்டமிட்டு வன்முறையையும், கலவரங்களையும் ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவாரங்கள் அரங்கேற்றி வரு கின்றன. சிறுபான்மை சமூக மக்களின் பொருளா தார, வாழ்வாதார வாய்ப்புகளை எல்லாம் பறித்து மோசமான எதேச்சதிகார பாதையில் மோடி அரசு பயணித்துக் கொண்டிருக்கின்றது.
தொழிலாளர் உரிமைச் சட்டங்களை மறுக்கவும், விவசாயிகள் விரோதச் சட்டங்களை இயற்றவும், அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளத்தை தகர்த்து ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கவும், மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கவும் மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கல்வி, வேலை, பெண்களின் பாதுகாப்பு, சமூக ஒடுக்குமுறை அனைத்திலும் அக்கறையற்ற அரசாக மோடி அரசு செயல்படுகிறது. தொழிலாளர் - விவசாயிகள் உள்ளிட்ட பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை பாதுகாப்பதற்கு மோடி அரசை தனிமைப்படுத்தி வீழ்த்துவது ஒன்றே சரியான அரசியல் இலக்கு. இதற்கு இந்தியாவிலும், தமிழகத்தி லும் அரசியல், சமூக, பொருளாதாரத் தளங்களில் தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்ட இயக் கங்கள் வலுப்பட வேண்டும். தோழர் சிங்காரவேலர் ஏற்றி வைத்த செங்கொடி வழிகாட்டும் ஒளிவிளக் காக பட்டொளி வீசிப் பிரகாசிக்கட்டும். மே தினம் வெல்லட்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.