புதுதில்லி, மார்ச் 13- ஏப்ரல் 5 தில்லி பேரணியை மாபெரும் வெற்றி பெறச் செய்திடுவோம் என்று சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. இது தொடர்பாக சிஐடியு பொதுச் செய லாளர் தபன்சென், அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் விஜூ கிருஷ்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் வெங்கட் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் கோரியிருப்பதாவது: மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் அதானி, அம்பானி போன்ற தன் கூட்டுக்கள வாணிகள் தொழிலாளர்களையும் விவசாயி களையும் சுரண்டி, கொள்ளை லாபம் ஈட்டும் வகையில் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டி ருக்கிறது. கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள் காரணமாக ஏற்பட்டுள்ள பணவீக்கம் அரிசி, கோதுமை, தானியங்கள், பால், தயிர், காய்கறி முதலான அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை விஷம் போல் ஏற்றி, சாமானிய மக்களின் வாழ்வாதாரங்களைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத் திற்குச் சென்றுள்ளது. இதன் விளைவாக சமூ கத்தில் விளிம்புநிலையில் உள்ள மக்கள் கடு மையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மோடி அரசாங்கம், வேலையின்மையைப் போக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அதே சம யத்தில், தொழிலாளர்களுக்கு இருந்துவரும் குறைந்தபட்ச ஊதியம், 8 மணி நேர வேலை, கூட்டம் கூடும் உரிமை உட்பட சட்டரீதியான உரிமைகளையும் பறித்துக் கொண்டிருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு சட்டத்தின் கீழ் ஒதுக்கீட்டைக் குறைத்தி ருப்பதன் மூலம் இருந்துவரும் 100 நாள் வேலை யையும் வெட்டிச் சுருக்கி இருக்கிறது.
அதே சமயத்தில் மறுபக்கத்தில் ஜனநாயக நிறுவனங்கள் கலைக்கப்பட்டு, ஜனநாயக உரி மைகளும் பறிக்கப்பட்டிருக்கின்றன. தங்கள் ஆட்சிக்கு எதிராகக் கருத்து கூறுபவர்களைத் தேச விரோதிகளாக முத்திரை குத்தி, சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் என்னும் அரக்கத்தனமான சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கிறது. உண்மையான பிரச்சனைகளுக் காக அணிதிரளும் மக்களைப் பிளவுபடுத்து வதற்காக அவர்கள் மத்தியில் மதவெறி நஞ்சு பரப்பப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் நாட்டின் செல் வத்தை உற்பத்தி செய்துவரும் அடிப்படை வர்க் கங்களான தொழிலாளர்கள், விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்களின் அமைப்புகளான சிஐ டியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஒன்று பட்டு நின்று போராட்டங்களை வலுவாக முன்னெ டுத்துச் செல்ல தீர்மானித்திருக்கிறது. 2022 செப்டம்பர் 5 அன்று தில்லியில் நடை பெற்ற மாபெரும் சிறப்பு மாநாட்டின் அறைகூவ லுக்கிணங்க, 2023 ஏப்ரல் 5 அன்று மாபெரும் தொழிலாளி-விவசாயி-விவசாயத் தொழிலாளி களின் பேரணியை தில்லியில் நடத்திடத் தீர்மா னித்திருக்கிறது. தொழிலாளர்கள்-விவசாயிகள்-விவசாயத் தொழிலாளர்களின் கண்ணியத்தையும் உரிமை களையும் உத்தரவாதப்படுத்திட, 2023 ஏப்ரல் 5 பேரணியை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று அனைத்துத் தொழிலாளர்கள், விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் அனைவரும் அறைகூவல் விடுக்கிறோம். இவ்வியக்கத்தில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் ஒருமைப்பாட்டையும், ஆத ரவையும், பங்களிப்பையும் அளித்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறி யுள்ளார்கள். (ந.நி.)