states

தமிழகத்தை விளையாட்டு தலைநகரமாக மாற்றுவோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை, டிச.14- தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை  அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட  உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது, “விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம்  அளிக்கும் வகையில் விளை யாட்டு துறையை மேம்படுத்து வேன்”என்றார். தேர்தல் அறிக்கையின்படி ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு விளையாட்டு மைதானம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றும் தமிழ்நாட்டை விளை யாட்டு தலைநகரமாக மாற்ற முயற்சிப்பேன் என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டை விளையாட்டு துறையில் முன்னோடி மாநில மாக மாற்றுவதற்கான அனைத்து  முயற்சிகளையும் மேற்கொள்வ துடன் அதை நோக்கிய பயணம் தொடரும் எனவும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், இளைஞரணி செய லாளர் மற்றும் சட்டமன்ற உறுப் பினரான போதும்  விமர்சனங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது.  வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை தவிர்க்க முடியாது. இதற்கெல்லாம் எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் பொறுப்பை சரிவர நிறைவேற்ற  உள்ளதால், இனி  திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் “மாமன்னன்”  எனது கடைசி  திரைப்படம் என்றும் அவர் கூறினார்.