பொகோடா, ஜூன் 21- “உண்மையான மாற்றம் வருகிறது” என்று கொலம்பியாவின் புதிய ஜனாதிபதி யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடதுசாரி வேட்பாளர் குஸ்தவோ பெட்ரோ தெரிவித்துள் ளார். தனது வெற்றி உரையை ஆதரவாளர்கள் மத்தியில் ஆற்றிய பெட்ரோ, “மாற்றத் திற்கான வாக்கு இது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இப்போது வருவது உண்மையான மாற்றமாகும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆளும் வலதுசாரிகள் முதல் சுற்றிலேயே தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்று சுட்டிக்காட்டிய பெட்ரோ, புதிய மாற்றத் திற்காக கொலம்பிய மக்கள் வாக்களித்துள் ளனர் என்று தெரிவித்தார். பெரும் பணக்காரரான ரொடோல்போ ஹெர்னாண்டசுக்கு எதிரான தேர்தல் களத்தில் 50.5 விழுக்காடு வாக்குகளைப் பெற்று இடதுசாரி வேட்பாளர் குஸ்தவோ பெட்ரோ வாகை சூடியுள்ளார். ஊழலுக்கு எதிரான போர் என்று அறிவித்துக் கொண்டு களத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டாலும் வலதுசாரி அமைப்புகள் முழுவதும் ஹெர்னாண்டஸ் பக்கம் திரண்டிருந்தன. இருப்பினும் மாற்றம் என்பதற்கான மக்களின் ஆசை நிறை வேறியுள்ளது என்று பெட்ரோவின் ஆதர வாளர்கள் தெரிவிக்கிறார்கள். முதன்முறை யாக இடதுசாரித் தலைவர் ஒருவர் கொலம்பிய ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டிருப்ப தைப் பெருமையுடன் அவர்கள் சுட்டிக்காட்டு கிறார்கள்.
தொடர் இயக்கங்கள்
இடதுசாரிகளுக்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள இந்த ஆதரவு திடீரென்று கிடைத்ததல்ல என்று தெரிவிக்கும் ஆதர வாளர்கள், “இடதுசாரிகளுக்கு என்ற ஆதரவு எப்போதுமே இருந்து வந்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற எழுச்சி கரமான போராட்டங்கள் இடதுசாரிகளின் தளங்களை விரிவடையச் செய்தது. குறிப் பாக, வரி உயர்வு, ஊழல் மற்றும் சுகாதா ரத்துறை சீர்திருத்தங்கள் ஆகியவற்றிற்கு எதிராக ஏப்ரல் 28, 2021 அன்று நடத்தப்பட்ட பெருந்திரள் போராட்டங்களுக்கு இடதுசாரிகள் தலைமையேற்றனர். இது கொலம்பிய அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்துவிட்டது” என்று கூறுகிறார்கள். கொரில்லாக் குழுவில் இடம் பெற்று கொலம்பிய அரசுகளின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக ஆயுதந்தாங்கிப் போராடிய எம்19 குழுவில் குஸ்தவோ பெட்ரோ வும் இணைந்திருந்தார். 1970 ஆம் ஆண்டு நடந்த தில்லுமுல்லுத் தேர்தல்களை எதிர்த்து இந்தக்குழு உருவாக்கப்பட்டிருந்தது. தனது 17வது வயதில் அந்தக் குழுவில் இணைந்த பெட்ரோ, பத்தாண்டுகள் அதில் பணிபுரிந்தார். பின்னர் நாடாளுமன்ற அரசியலில் பங்கேற்று, நாடாளுமன்ற உறுப்பினர், தலைநகர் பொகோடா மாநகர மேயர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தார்.
சுற்றுச்சூழல் போராளி
தேர்தலில் அவருடன் இணைந்து துணை ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட பிரான்சியா மார்குஸ் மினா, முதல் கறுப்பினப் பெண் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்க வுள்ளார். உயர் மட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே அரசியல் என்ற நிலைமைதான் கொ லம்பியாவில் இருந்து வந்தது. அதில் முதன்முறையாக வறுமையில் வாடிய நிலை யில் இருந்து, அரசியலில் உச்சத்தைத் தொட்டுள்ள பிரான்சியாவின் கதை வித்தியா சமானதாக உள்ளது. 2014 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக தங்கம் தோண்டி எடுப்பதற்கு எதிராகக் குரல் எழுப்பினார். 80 பெண்களுடன் 560 கி.மீ. நடைபயணம் மேற்கொண்டார். சட்டவிரோத வளக்கொள்ளைக்கு எதிரான போராட்டத்திற்கு விருதும் கிடைத்தது. தற்போது துணை ஜனாதிபதியாக பிரான்சியா பொறுப்பேற்கவிருக்கிறார்.
அம்லோ பாராட்டு
கொலம்பியாவின் ஜனாதிபதியாக குஸ்தவோ பெட்ரோ தேர்வு செய்யப்பட்டுள்ள தற்கு மெக்சிகோவின் ஆண்ட்ருஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார்(அம்லோ) பாராட்டு தெரி வித்துள்ளார். இது குறித்து கருத்து தெரி வித்துள்ள அவர், “ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் இறுதி அத்தியாயம் கொலம்பிய வெற்றி” என்று கூறியுள்ளார். கொலம்பியா தேர்வு முடிவுகள் வரத் தொடங்கியதுடன் வெற்றி பெற்ற இடதுசாரி வேட்பாளர் குஸ்தவோ பெட்ரோவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம்லோ பேசியிருக்கிறார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மக்களின் இறையாண்மை மற்றும் சுயாட்சி ஆகிய இரண்டும் கொண்ட களத்தை நாங்கள் முன்மொழிந்து வருகிறோம். இயற்கை வளங்கள், மனித வளம், தொழில்நுட்பம் மற்றும் சந்தை ஆகியவற்றை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளும் பகுதியாக தென் அமெரிக்கா உருவாகி வருகிறது. ஐரோப் பிய சமூகமாக இருந்து, ஐரோப்பிய யூனி யனாக மாறியது போன்று நாங்களும் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.