பிரேசிலியா, மே 3- லத்தீன்-அமெரிக்க நாடுகள் இணைந்து தங் களுக்கென்று தனியாக ஒரு புதிய நாணயத்தை உரு வாக்கிக் கொள்ளலாம் என்று பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லூலா டி சில்வா ஆலோசனை அளித்துள் ளார். வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெற விருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் இவர் போட்டி யிடவிருக்கிறார். கருத்துக் கணிப்புகள் அனைத்தும் இவர் மீண்டும் வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கின்றன. இந்நிலை யில் சோசலிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசிய இவர், ‘‘நாம் டாலரை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. லத்தீன்-அமெரிக்க நாண யத்தை உருவாக்கிக் கொள்ளலாம்’’ என்று தெரி வித்துள்ளார்.