states

கொடநாடு வழக்கு : நீதிபதி திடீர் இடமாற்றம்

நீலகிரி,ஏப்.26- நீலகிரி மாவட்டம்  கோத்தகிரி பகுதியில் கொடநாடு தேயிலை தோட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக  10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்,  தற்போது அனைவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர். சமீபத்தில் தனிப்படை போலீசார் சென்னையில் சசிகலாவிடம் இரண்டு நாள் விசாரணை நடத்தினர். இந்த வழக்கானது உதகை  மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டு கால மாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கடந்த  ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கை மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா விசாரித்து வந்தார்.  இந்நிலையில் கொடநாடு  வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி  சஞ்சய் பாபா தற்போது திடீரென்று பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் நிர்வாக  காரணங்களுக்காக 55 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர்களில் உதகை மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சய் பாபாவும் இடம் பெற்றுள்ளார். இவருக்கு பதிலாக உதகை மாவட்ட  அமர்வு நீதிபதியாக சென்னையில் உள்ள தொழித் துறை தீர்ப்பாய நீதிபதி முருகன் என்பவர் நிய மிக்கப்பட்டுள்ளார்.