states

தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரகப் பாதிப்பு

சென்னை, மே 23- தமிழகத்தில் ஆண்களில் ஐந்தில் ஒரு வருக்கு சிறுநீரகப் பாதிப்பு வரலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  தமிழகத்தில் பத்து சதவீதம் பேருக்கு நாள்பட்ட சிறுநீரகப் பாதிப்பு இருப்பது, பொது  சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு இயக்குன ரகம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது.  காப்பீட்டுக் கோரிக்கைகள் மற்றும் பிற தொற்றாத நோய்களின் அறிக்கைகள் மூலம் மருத்துவமனைகளில் பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளிடமிருந்தே சிறுநீரக நோய் குறித்த தரவுகள் கிடைக்கப்பெறுகின்றன.  இந்த நோய்க்கான காரணம் குறித்த போது மான தரவுகள் அரசிடம் இல்லை. இந்த நிலையில் தமிழகத்தில்  சிறுநீரக நோய் குறித்த தரவுகள் இல்லாததால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கடந்த பிப்ரவரியில் தொடங்கிய ஆய்வு, மாநி லம் முழுவதும் சுமார் 177 இடங்களில் நடத்தப் பட்டது. பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு இயக்குனரகமும் சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறையும் இணைந்து இந்த ஆய்வை நடத்தியது. ஒரு  மருத்துவ அதிகாரி, ஒரு சுகாதார ஆய்வாளர் உட்பட 92 ஆய்வுக் குழுக்கள், தரவுகளை திரட்டியுள்ளது.

மாநிலத்தில் நாள்பட்ட சிறுநீரக நோய் (சிகேடி) (Chronic Kidney Disease) பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது. சிறியவர்கள் உட்பட 5 ஆயிரத்து 310 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் உள்ள ரத்த சிவப்பணுக்களில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதில், 4 ஆயிரத்து 741 பேரில், 455 பேருக்கு (9.5%) சிறுநீரகச் செயல் பாடுகள்  பாதிப்படையும் ஆரம்ப நிலை கண்ட றியப்பட்டது. மேலும், சிறுநீரகத்தில் இருக்கும் புரதம், சிறுநீர் வழியே வெளியேறும் தன்மை 367 பேருக்கு இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 4 ஆயிரத்து 741 பேரில் 934 பேர் அதாவது, 19.7  விழுக்காட்டின ருக்கு சிறுநீரகப் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆரம்ப கட்ட கணக்கெடுப்பின் மூலம் 5ல் ஒருவருக்கு சிறுநீரகப் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதில், பலருக்கும் சிறுநீரகம் சார்ந்த பிரச் சனை தங்களுக்கு இருக்கிறது என்பதே தெரியவில்லை. இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில்  சிறுநீரகங்கள் தொடர்பான நோய்களின் பாதிப்பு சுமார் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. குறிப்பாக, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற இணைநோய் உள்ளவர்கள் கட்டாயம் சிறு நீரக பரிசோதனை செய்து கொள்ள வேண்டு மென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு  (சிகேடி) உள்ளவர்கள் என அடையாளம் காணப் பட்ட நபர்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப் படுவார்கள். அவர்களுக்கு சீரான அசாதாரண அளவீடுகளைக் கொண்டிருந்தால் மட்டுமே, அவர்களுக்கு சிறுநீரக நோய்  பாதிப்பு சி.கே.டி. இருப்பது உறுதி செய்யப் படும். முடிவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும் என மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறுநீரகங்களை பாதுகாக்க எளியவழி

சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் நாம் மேற்கொள்ளும் பழக்க வழக்கங்களும், உணவுப் பொருட்களும் தான். சிறுநீரகங்கள் உடலில் பல்வேறு செயல் களை செய்கிறது. சோடா அதிகம் குடித்து வந்தால், அது  சிறுநீரகங்களுக்கு பெரும் ஆபத்தை விளை விக்கும். சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி பெரிதும் உத வியாக இருக்கும். உடற்பயிற்சி செய்வதால் சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்பு  குறை வாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் தான் சிறுநீரக திசுக்கள்  புதுப்பிக்கப்படும். அப்போது சரியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், சிறுநீரகமானது நேரடியாக பாதிக்கப்படும். தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால், சிறுநீரக இயக்கம் பாதிக்கப்படும். நீங்கள் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடித்து வருகிறீர்கள் என்பதை சிறுநீர் கொண்டு கண்டுபிடிக்க லாம். உங்களின் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளிவந்தால், நீங்கள் தினமும் சரி யான அளவில் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று அர்த்தம். சிறுநீரை அடக்கி வந்தால், சிறு நீர்ப்பையின் அழுத்தம் அதிகரித்து, அத னால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதோடு,  சிறு நீரக செயலிழப்பு ஏற்பட்டுவிடும். ஆகவே சிறு நீர் வந்தால் அதனை அடக்காமல் உடனே வெளியேற்ற வேண்டும்.