states

ரூ.1000 கோடி மோசடியில் சிக்கியவருக்கு பாஜகவில் முக்கியப் பொறுப்பு

சென்னை,ஜூன் 22- பொதுமக்களிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம்  கட்டினால் மாதம் ஒன்றுக்கு  30 ஆயிரம் ரூபாய் வட்டித் தொகை தருவதாக கவர்ச்சிகரமான விளம்ப ரங்களைக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக, கடந்த 24ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிதி நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.3.41 கோடி பணம் கொண்ட 11  வங்கிக்கணக்குகளை முடக்கம் செய்து, அதன் இயக்குநர்கள் 14 பேர் மீதும் மற்றும் 5 நிறுவனங்கள் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ஆருத்ராவின் 70 வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநரான பாஸ்கர் மற்றும் மோகன் பாபு ஆகிய  இருவரை கைது செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், மீதமுள்ள இயக்குநர்களான ஹரிஷ், உஷா, ராஜசேகர், செந்தில் குமார், பட்டாபிராமன், மைக்கேல் ராஜ் உட்பட பலரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் 4ஆவது குற்ற வாளியாக சேர்க்கப்பட் டுள்ள ஹரிஷ் என்பவருக்கு  காஞ்சிபுரம் மாவட்ட  பாஜகவில் நிர்வாகி  பொறுப்பு வழங்கப்பட் டுள்ளது. இவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே, கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த  கல்வெட்டு ரவி, புளியந் தோப்பு அஞ்சலை உட்பட  பலர் பாஜகவில் இணைந் துள்ள நிலையில், தற்போது மோசடி வழக்கில் சிக்கிய ஹரிஷ் பாஜகவில் சேர்ந்த வுடன் பொறுப்பு வழங்கப் பட்டுள்ளது.