states

தீக்கதிர் விரைவு செய்திகள்

மோடியைப் புறக்கணித்து சின்ஹாவை வரவேற்ற கேசிஆர்!

ஹைதராபாத்,ஜூலை 2- தெலுங்கானா மாநிலத் திற்கு பிரதமர் நரேந்திர மோடி வரும்போதெல்லாம் அவரை வரவேற்பதை அம்மாநில முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தவிர்த்து வருகிறார். அந்த வகையில், கடந்த 6 மாதங்களில் 3-  ஆவது முறையாக சனிக்கிழ மையன்றும் மோடியின் வரு கையை கே.சி. சந்திரசேகர ராவ் புறக்கணித்துள்ளார். அதேநேரம், பிரதமர் மோடி  வரும் அதே விமான நிலை யத்திற்கு எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பா ளர் யஷ்வந்த் சின்ஹா சனிக்  கிழமையன்று வந்தபோது, அவரை விமான நிலையத் திற்கே நேரில் சென்று சால்வை அணிவித்து வரவேற்றார்.

நாட்டை சேதப்படுத்திய மோடி சந்திரசேகர ராவ் விமர்சனம்


ஹைதராபாத், ஜூலை 2- பாஜக தேசிய செயற் குழுக் கூட்டம் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி  தலைமையில் தொடங்கி யது. கூட்டம் ஞாயிறன்றும் நடைபெறுகிறது. இதற்காக  பிரதமர் மோடி சனிக்கிழமை ஹைதராபாத் வந்தார். மோடி வருகையை யொட்டியும், குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த்சின்ஹா வருகை யையொட்டியும் கருத்துத் தெரிவித்துள்ள தெலுங் கானா முதல்வர்  மோடிக்கு முன் எந்தப் பிரதமரும் இந்தி யாவின் நற்பெயரை இந்த  அளவுக்கு சேதப்படுத்த வில்லை என தெலுங்கானா  முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.  மோடியை கடுமை யாக விமர்சித்து, டிஆர்எஸ்  தலைவர் எம் கிரிஷாங்க்,  பிரிட்டானியா நிறுவனத்தின்  “அச்சே தின் பிஸ்கட்” (நல்ல நாள்) என்ற  விளம்பரத்தின் புகைப்படத்தை ட்வீட் செய்துள்ளார் - இது பாஜக வின் 2014 தேர்தல் பிரச்சார முழக்கத்தை குறிக்கிறது. “மோடி ஜிக்கு பிடித்த பிஸ்கட்”.

உச்சநீதிமன்ற கருத்துக்கு எதிர்ப்பு!

முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசியதற்காக பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவை உச்ச நீதி மன்றம் வெள்ளிக்கிழமையன்று கடுமையாகச் சாடியது. அதிகாரம் தலைக்கு ஏறிவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என  நினைக்கக் கூடாது. நூபுர் சர்மா தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்க ளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிரடி உத்தரவும் பிறப்பித்தது. இந்நிலையில், நூபுர் ஷர்மாவுக்கு எதிரான கருத்துக்களை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் என்று தில்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், கவு மகாசபா தலைவருமான ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவிடம் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

முகம்மது ஜூபைரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

போலியான செய்திகளை அம்பலப்படுத்தும் ‘ஆல்ட் நியூஸ்’ என்ற இணையதள செய்தி நிறுவனத்தின் இணை நிறு வனர் முகம்மது ஜூபைர், குறிப்பிட்ட ஒரு மதத்தின் கடவுளை இழிவுபடுத்தி  டுவிட்டரில் படம் வெளியிட்டதாக இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ, 295ஏ ஆகிய பிரிவுகளில் தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், முகம்மது ஜூபைர், தனக்கு ஜாமீன் கோரி, தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதி மன்றத்தில் சனிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  ஜூபைரின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம் ஜூபைரின் நீதிமன்றக்  காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவிலிருந்து நீக்கம்!

பாஜக ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியின் அனைத்து பதவிகளிலும் இருந்தும் உத்தவ் தாக்கரே நீக்கியுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஷிண்டே நீக்கப்பட்டுள்ள தாக சிவசேனா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “பாஜகவுடன் கைகோர்த்துள்ள ஏக்நாத் ஷிண்டே நாங்கள்தான் உண்மையான சிவசேனா” என் கூறிவந்த பின்னணியில் இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல் செலவு 70 லட்சம்தானாம்...

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்க ரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் கவுகாத்தியில் உள்ள ‘ரேடிசன் புளூ’ சொகுசு ஹோட்டலில் 70 அறைகளைப் புக் செய்து  தங்கியிருந்தனர். இதற்கு கோடிக்கணக்கில் செலவான தாக கூறப்பட்ட நிலையில், தற்போது 8 நாட்களுக்கு சுமார் ரூ. 70 லட்சம் மட்டுமே செலவானதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது வாடகை மட்டுமே என்றும், உணவுக்கு தனியாக ரூ. 22 செலவானதாகவும் கூறப்படுகிறது.

சிரோமணி அகாலி தளம் முர்முவுக்கு ஆதரவு!

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவை ஆதரிப்பதாக சிரோ மணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் அறி வித்துள்ளார். பாஜக கூட்டணியில் இல்லாத பிஜூ ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் வரிசையில் சிரோமணி அகாலி தளம் கட்சியும் தற்போது முர்முவுக்கு தனது ஆதரவை அளித்துள்  ளது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா நேரில் சந்தித்து விடுத்த வேண்டுகோளை ஏற்று முர்முவை ஆதரிப்பதாக பிரகாஷ் சிங் பாதல் கூறியுள்ளார்.




 

தமிழ்நாடு ஆசிரியர் தகு தித் தேர்வு எழுதவிருக் கும் விண்ணப்பதா ரர்கள் தங்களது விண் ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்புவோர், ஜூலை 11 முதல் 16 ஆம்  தேதிக்குள் திருத்தங் களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரி யம் தெரிவித்துள்ளது.

மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் ரயில்வே கட்டுமானத் தளத்தில் சனிக்கிழமையன்று திடீ ரென நிலச்சரிவு ஏற்பட் டது. இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படை வீரர்  உள்பட அசாம் மாநிலத்  தைச் சேர்ந்த 25 பேர்  பலியானதாக அதிகாரி கள் தெரிவித்தனர். இதில், 18 பேர் காயம டைந்துள்ளனர். மேலும் 35 பேரை காணவில்லை. காணாமல் போனவர் களை இராணுவத்தினர் தேடி வருகின்றனர்.

இந்தியாவின் தலைநகர் தில்லியில் மாசினைக் கட்டுப்படுத்தும் முயற்சி யின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு இறுதிக்குள் 35 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என தில்லி அர சின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

பிரான்சின் பாரிஸ் மற்றும் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து கிளம்பவிருந்த பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. குறைவான ஊதியம் வழங்கி வருவதற்கும், உயர்ந்து வரும் விலைவாசிக்கு எதிராகவும் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததே இதற்குக் கார ணமாகும். வேலை நிறுத்தம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும், வெறும் 10 விழுக்காடு விமானங்கள் தான் ரத்தானது என்று அரசுத்தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், பெரும் வெற்றியாக வேலை நிறுத்தம் இருக்கிறது என்று ஊழியர்கள் சொல்கிறார்கள்.

பொது வாழ்விலும், சர்வதேச அமைப்புகளுடனான உறவி லும் பெரும் அனுபவம் வாய்ந்த ஜோஸ் அன்டோனியோ ஒகாம்போ கொலம்பியா வின் புதிய நிதியமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். “ஒரு வளர்ச்சி சார்ந்த பொரு ளாதாரத்தையும், அந்த வளர்ச்சி நிரந்தர மானதாக இருக்கும் ஒன்றாகவும் உரு வாக்குவதே எங்கள் இலக்காகும். அதற்காகவே கொலம்பியாவின் நிதிய மைச்சராக ஒகாம்போ நியமிக்கப்பட்டுள் ளார்” என்று கொலம்பியாவின் புதிய ஜனாதிபதி குஸ்தவோ பெட்ரோ அறிவித் திருக்கிறார்.

வறுமையை ஒழிக்கவும், மக்கள் பிற நாடுகளுக்கு குடியேறச் செல்வதைக் குறைக்கவும் வலுவான மத்திய அமெரிக்கா தேவை என்று நிகர குவா கூறியுள்ளது. அமெரிக்காவின் டெக் சாஸ் நகருக்குள் நுழைய முயன்ற 53 பேர் இறந்து போனதற்கு இரங்கல் தெரிவித்த நிகரகுவாவின் துணை ஜனாதிபதி ரொ சாரியோ முரில்லோ, “வறுமையே மக்கள் இடம் பெயர முயல்வதற்குப் பிரதான காரணம்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.