மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகாரில் கஜகஸ்தான், மங்கோ லியா, இந்தோனேஷியா ஆகிய 3 நாடுகளில் நடந்த போட்டிகளின் போது பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத் தின் தலைவருமான பிரிஜ் பூஷணால் பாலி யல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குறிப்பிடப் பட்டுள்ள நிலையில், அந்தந்த நாடுகளின் மல் யுத்த கூட்டமைப்பு களுக்கு தில்லி காவல் துறை நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. போட்டியில் இந்திய வீராங்கனைகள் கலந்து கொண்ட போது பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை வழங்கு மாறும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக இருந்த நிலையில், ரயில் விபத்தில் சிக்கி முதுகுத் தண்டில் பலத்த காயத்து டன் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த பீகாரைச் சேர்ந்த பிஜய் பாஸ்வான் உயிரி ழந்ததன் மூலம் பலி எண்ணிக்கை 289 ஆக உயர்ந்தது.
அமெரிக்காவை தள மாகக் கொண்ட பிரபல உணவு ஆர்டர், டெலி வரி நிறுவனமான க்ருப் 15% ஊழியர்களை - அதாவது 400 ஊழி யர்களை வெளியேற்று வதாக அறிவித்துள்ளது.
ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் உள்ள டாடா ஸ்டீல் நிறுவன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 19 பேர் காயமடைந்தனர்.
பூமியில் இருந்து 700 மில்லியன் ஒளியாண்டு களுக்கு மேல் உள்ள விண்மீன் தொகுப்பில் உள்ள “ஜெல்லிமீன் விண்மீன்” மண்ட லத்தை “ஹப்பிள்” விண் வெளி தொலைநோக்கி புகைப்படம் எடுத்துள்ள தாக நாசா அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை களைய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள் ளது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் அருகே காற் றாலை இறக்கை ஏற்றிச் சென்ற 3 லாரிகள் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள இறக்கைகள் சேதமடைந்தன.
உலகச் செய்திகள்
அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையில் தாங்கள் ஒருபோதும் அதை விட்டு விலகி விடவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில் போடப்பட்ட உடன்பாட்டை அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இருந்தபோது, தன்னிச்சையாக ரத்து செய்தார். அதை மறுபடியும் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு எப்போதுமே ஈரான் தயாராகவே இருந்து வந்துள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி கூறியுள்ளார்.
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமீர் புடினுடன் கைகோர்த்து நின்று, அந்நாட்டிற்கு முழு ஆதரவைத் தெரிவிப்போம் என்று வடகொரியாவின் தலைவர் கிம் ஜோங்-உன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தேசிய தினத்தையொட்டி அவர் அனுப்பியுள்ள செய்தியில் மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையில் இருக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். நீதி வெல்லும் என்றும், ரஷ்ய மக்கள் தொடர்ந்து வெற்றியைத் தழுவுவார்கள் என்றும் அவர் கூறினார்.
பொலிவியாவின் சுரங்கத் தொழிலாளர்கள் சங்கத்தின் 79ஆவது ஆண்டு விழாவையொட்டி அந்நாட்டின் ஜனாதிபதி லூயிஸ் அர்ஸ் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அந்த சங்கத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், எங்கள் பாதைக்கு வழிகாட்டியாக எப்போதும் சுரங்கத் தொழிலாளர்களின் புரட்சிகரப் போராட்டங்கள் இருந்து வந்தன என்று அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகும், தொழிற்சங்கங்களோடு நெருக்கமான உறவை அவர் தொடர்ந்து வருகிறார்.