புதுதில்லி, ஜூன் 10- வருவாய் ஈட்டுவதற்கான வழியில்லாதது உள்ளிட்ட காரணங்களால் கர்நாடகா வில் உள்ள பிரபல வங்கி யின் உரிமத்தை ரிசர்வ் வங்கி அதிரடியாக ரத்துசெய்துள் ளது. இந்திய ரிசர்வ் வங்கி யின் விதிமுறைகளை மீறி செயல்படும் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வரு கிறது. அந்த வகையில், ரிசர்வ் வங்கியின் விதிமுறை களை முறையாக பின்பற் றாத கர்நாடக மாநிலத்தில் உள்ள முதோல் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி அதிரடியாக ரத்து செய்து உத்தரவு பிறப் பித்துள்ளது. மேலும், இந்த வங்கிக்கு சில தடைகளையும் விதித் துள்ளது. இதனால், இந்த வங்கியின் வாடிக்கையாளர் கள் புதிதாக பணம் போடவோ அல்லது தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் கூறு கையில், ‘உரிமம் ரத்து செய் யப்பட்ட வங்கியிடம், தற் போது போதிய மூலதனம் இல்லை. வருவாய் ஈட்டு வதற்கான வாய்ப்புகளும் இல்லை. வாடிக்கையாளர் களின் 99 சதவீத டெபாசிட் தொகை கடன் உத்தரவாத நிறுவனத்தின் சார்பில் வழங் கப்படும்’ என்று தெரிவித்தன.