states

அர்ச்சகர் நியமனம் குறித்த நீதிமன்ற உத்தரவு

சென்னை,மார்ச் 14-  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்; ஆகமங்கள் தடையில்லை என்று நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் அறிக்கை கொடுத்துள்ள நிலை யில்தமிழ்நாடு அரசு உரிய வகை யில் செயல்படட்டும் என்று  திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி  கேட்டுக்கொண்டுள் ளார். இதுகுறித்து அவர் விடுத் துள்ள அறிக்கையில் தி.மு.க.  அரசால் திருச்சி குமார வயலூர் கோவிலில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர் நியமன ஆணையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது. அக்கோவிலில் அர்ச்சகர்களாகப் பணியாற்றியவர்களின் மனுவின் மீதுதான் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுபோன்ற வழக்குகள் எல்லாம் குறிப்பிட்ட ஒரு நீதி பதியிடமே வருவதும், அந்த நீதிபதியும் தங்கள் மக்களுக்குச் சாதகமாக தீர்ப்பளிப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.  வைணவத்தில் ஜாதியில்லை. அப்படியிருக்கும்போது வைணவக் கோவில்களில் குறிப்பிட்ட ஜாதிப் பிரிவினர்தான் அர்ச்சகராகவேண்டும் என்ற விதி எப்படி பொருந்தும்? சிதம்பரம் நடராஜர் கோவில்  ஆகம முறைப்படி அமைக்கப் பட்ட கோவில் அல்ல. அது போலவே, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலும் ஆகமப்படி அமைக்கப்பட்ட கோவில் அல்ல. ஆகமம் தெரியாதவர்கள் அர்ச்சகராக இருக்கலாமாம், தொடரலாமாம்; முறைப்படி அர்ச்சகர் பயிற்சி பெற்ற வர்கள் அர்ச்சகராக ஆகத் தகுதி யில்லையாம் இது ஜாதி  அடையாளமாகப் பார்க்கப்படுவ தன்றி வேறு என்ன? தீண்டாமை  எந்த வடிவத்தில் கடைப்பிடிக்கப் பட்டாலும், குற்றம் குற்றமே!  மாற்றம் என்பதுதான் மாறா தது! அது எல்லா விஷயத்திலுமே என்பதை நீதிமன்றம் உணர வேண்டும். கோவில் விஷயத்தி லும் மாற்றங்கள் வந்துள்ளன. அவற்றை வசதியாக மறந்து விட்டு, ஆகம விதிகள் என்றும், அதனை மாற்ற முடியாது - கூடாது  என்றும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தான் அர்ச்சகர் ஆக முடியும் என்று சொல்லுவது எல்லாம் ஜாதி  உணர்வுக்கு - எதிரான பெரும் அலையை ஏற்படுத்தக் கூடியனவே!

கேரளாவைப் பாரீர்!

அண்டை மாநிலமான கேரளா வில், திருவாங்கூர் தேவசம் போர்டுக்குச் சொந்தமான 1200  கோவில்கள் உள்ளன. பார்ப்பனர்   அல்லாத 36 பேரை அர்ச்சகர் களாக்கியது - அதில் 6 பேர்  தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் கள். அரசமைப்புச் சட்டம் கேரளா வுக்கு ஒன்று; தமிழ்நாட்டுக்கு வேறு ஒன்றாக இருக்க முடி யாது.  நீதிமன்ற முறையில் மேற் கொள்ளவேண்டிய வழிமுறை களை  மாநில அரசு காலந்தாழ்த்தா மல் இதுகுறித்து உரிய ஆலோ சனைகளை உரியவர்களிடம் பெற்று செயல்படவேண்டியது மிகவும் அவசியமாகும்.