states

பயிர் காப்பீடு: அரசு தெளிவுபடுத்த வேண்டும்

தஞ்சாவூர், ஜூலை 26- பயிர் காப்பீடு குறித்து தமிழக அரசு  உடனே தெளிவுபடுத்த வேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷணன் வலியுறுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு பொதுக்கூட்டம் திங்கட் கிழமை மாலை தஞ்சாவூர் கீழவாசல் ஆபிரகாம் பண்டிதர் தெருவில் நடை பெற்றது.  கூட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். மாநகரச் செய லாளர் எம்.வடிவேலன் வரவேற்றார். கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது:  டெல்டாவில் குறுவை சாகுபடி துவங்கி, பணிகள் நடந்து கொண்டி ருக்கிறது. இம்மாதம் 31 ஆம் தேதி யோடு, பயிர்க் காப்பீட்டு திட்டத்துக் கான, பதிவுக்கான காலக்கெடு நிறை வடைகிறது. ஆனால் தற்போது வரை  பயிர் காப்பீடு குறித்து தமிழக அரசு  தெளிவுபடுத்தவில்லை. இந்த ஆண்டு  பயிர் காப்பீடு இல்லை என்கிற நிலைமை  உருவாகியுள்ளது.

எனவே, ஒன்றிய-மாநில அரசுகள் உடனடியாக குறுவையில் பயிர்க் காப்  பீடு செய்ய கால அவகாசம் வழங்கி,  பயிர்க் காப்பீடு திட்டத்தை அறிவித்து, அதற்கான நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். குறுவைக்கு பயிர்  காப்பீடு இல்லை என்றால், விவசாயி களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். நெல் சேமிப்பு கிடங்கில், நெல்லை  பாதுகாத்து கொடுக்கக் கூடிய பணி யை தனியாரிடம் ஒப்படைப்பது என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வருகிறது. அந்த பணி தனி யாரிடம் ஒப்படைக்கப்பட்டால் தர மாக, பாதுகாப்பாக இருக்கும் என்ப தற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.   தமிழ்நாட்டுக்கு உணவுப்பொருள் விநியோகம் செய்வதில் ஆபத்து ஏற்  படும். நூறு நாள் வேலையை படிப்படி யாக ஒன்றிய அரசு ஒழித்துக் கட்டு கிற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதை வன்மையாக கண்டிக்கிறோம். அந்த திட்டத்தை செயல்படுத்த கூடுத லாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மைக்கேல்பட்டியில் பள்ளி மாணவி மரணம் குறித்து, பாஜக  தலைவர் அண்ணாமலை மதமாற்றம்  நடப்பதாக பெரிய போராட்டத்தையே நடத்தினார். ஆனால் கள்ளக்குறிச்சி யில் மாணவி இறந்த போது, இது வரை அங்கு ஏன் அண்ணாமலை வர வில்லை? அந்த பள்ளியை ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் நடத்து கிறார் என்பதால் வரவில்லையா? இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், மத்தியக் குழு உறுப்பி னர் உ.வாசுகி, மாநிலக் குழு உறுப்பி னர் சாமி.நடராஜன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்  பினர்கள், இடைக்குழு செயலா ளர்கள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்சியினர் திரளாக கலந்து  கொண்டனர். நிறைவாக மாவட்டக் குழு உறுப்பினர் என்.குருசாமி நன்றி  கூறினார். 

நிதியளிப்பு

பொதுக் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டக்குழு சார்பில் கட்சி நிதி யாக ரூ.23 லட்சத்தை மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணனிடம், மாவட் டச் செயலாளர் சின்னை.பாண்டியன் வழங்கினார்.