states

பாஜக ஆட்சியாளர்களால் ஒருபோதும் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க முடியாது

கூடலூர், நவ. 22- பாஜக ஆட்சியாளர்களால் ஒருபோதும் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க முடியாது; டேன்டீ நிறுவனத்தை பாதுகாப் போம் என பாஜக தலைவர் அண்ணாமலை போடும் நாடகத்தை ஒருபோதும் நீலகிரி மாவட்ட மக்கள் நம்ப மாட்டார்கள் என கே.பாலகிருஷ் ணன் பதிலடி கொடுத்தார். நீலகிரி மாவட்டம் கூடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்புப் பேரவை மாவட்  டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இதில்  கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி மற்றும் மூத்த தலைவர்கள் என்.வாசு, வி.வி.கிரி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். 

மாற்று யோசனை செய்க!

முன்னதாக  செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் டேன்டீ எனப்படும்  தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்களுக்கான பொதுத்துறை நிறுவனம் செயல்பட்டு வரு கிறது. 1970இல் துவக்கப்பட்ட இந்த நிறுவனம்,  சுமார் 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், தேயிலை  சாகுபடி செய்து வருகிறது. நீலகிரி மாவட்டத் தில், கோவை மாவட்டம் வால்பாறையில் செயல்  பட்டு வரும் இந்த டேன்டீ நிறுவனத்தின் மூலம் தாயகம் திரும்பிய பல்லாயிரக்கணக்கான தமி ழர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வாழ்வா தாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலை யில், தேயிலை பயிரிடப்பட்டுள்ள இந்த நிலத்தில் 5 ஆயிரத்து 200 ஏக்கர் நிலத்தை வனமாக மாற்று வது என்கிற முடிவை அந்த நிறுவனமும், தமிழக அரசும் எடுத்துள்ளது. தாயகம் திரும்பிய மக்களுக்காக உரு வாக்கப்பட்ட இந்த நிறுவனத்தை வலுப்படுத் தும் வகையில் மாற்று யோசனையை தமிழக  அரசு மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக 5ஆயி ரத்து 200 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள இந்த தேயிலை செடிகளை அழித்து வனமாக  மாற்றுவது என்பது, டேன்டீ நிறுவனம் மற்றும் இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டு மல்ல, இந்த மாவட்டத்தின் பொருளாதாரத் திற்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெ னில் நீலகிரி மாவட்டத்தின் பொருளாதார பின்  புலமே தேயிலையும், சுற்றுலாவும்தான். ஆகவே, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்க ளில் பயிடப்பட்டுள்ள தேயிலையை அழித்து வன மாக மாற்றுகிற நடவடிக்கை மாவட்ட பொருளா தாரத்தையும் நேரிடையாக பாதிக்கச்செய்வதற் கான வாய்ப்பு உள்ளது. ஆகவே, தொழிலாளர் பற்றாக்குறை என்ப தன் பெயரால் நிலத்தை வனமாக மாற்றுவதற்  குப் பதிலாக, தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு அந்த நிலத்தை சொந்தமாகவோ அல்லது குத்  தகை முறையிலோ வழங்கினால், அவர்கள்  அந்த நிலத்தில் தேயிலையை பயிரிட்டு பராம ரித்து அந்நிறுவனத்திற்கு வழங்குவார்கள். இத னால் அந்த நிறுவனமும் லாபத்தில் செயல் படும், என்பதோடு தொழிலாளர்களின் குடும்பத்  தின் பொருளாதாரமும் மேம்படும். 

குழு அமைத்து மேம்படுத்துக!

ஆகவே தமிழக அரசு, டேன்டீ நிறுவனத்தை  புனரமைப்பதற்கும், பொருளாதார ஸ்திரத்தன் மையை மேம்படுத்துவதற்கும் ஒரு குழுவை  அமைக்க வேண்டுகிறோம். குறிப்பாக இத்  தொழிலாளர்களை உள்ளடக்கிய குழுவை  அமைத்து, இத்தொழிலை மேம்படுத்துவதற் கான ஆலோசனையை மேற்கொள்ள மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.  கேரளாவில், நலிவடைந்த 28 பொதுத்துறை  நிறுவனங்களை புனரமைத்து மேம்படுத்தி லாபம் ஈட்டும் வகையில் கேரள  இடது ஜன நாயக அரசு மாற்றியுள்ளது. தமிழகத்திலும் இது போன்ற பொதுத்துறை நிறுவனங்களை புன ரமைத்து மேம்படுத்துவதற்கான நடவடிக்கை யை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.  சமீபத்தில் இங்கு பாஜகவின் பொதுக்கூட்டத்  தில், தமிழக அரசு இந்த டேன்டீ நிறுவனத்தை நடத்த முடியவில்லை என்றால், எங்களிடம் அளித்து விடுங்கள். நாங்கள் நடத்துகிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லியிருக்கிறார். இது எப்படி இருக்கிறது என்று சொன்னால் கூரை ஏறி கோழி பிடிக்கத்  தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போறேன் என்கிற கதையாக உள்ளது. பல்லாயி ரக்கணக்கான கோடி ரூபாய்களை நாட்டின் வளர்ச்சிக்காக அளித்து வருகிற எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறையை, பிஎஸ்என்எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை அழித்தும், திட்டமிட்டு நலிவடையச்செய்வதை மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு, மாநிலத்தின் பொதுத்  துறையை எங்களிடம் வழங்கி விடுங்கள் என்று  வேடிக்கை காட்டுகிறார் அண்ணாமலை. பாஜக வினரால் ஒரு போதும் பொதுத்துறை நிறுவனங்  களை பாதுகாக்க முடியாது. 

கேரள அரசின் முயற்சி வெற்றி

கேரளாவில், பாஜக இந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் என்கிற இந்திய பொதுத்துறை நிறு வனத்தை எங்களால் நடத்த முடியாது என கை விரித்து விட்டார்கள். இதனை கேரள இடது  முன்னணி அரசு ரூ.200 கோடி முதலீட்டில் தனது  கட்டுப்பாட்டில் எடுத்து புனரமைத்து, 3 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை  உருவாக்கி  இருக்கிறார்கள். அதில்,பல தொழில் நுட் பங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என அந்த அரசு முயற்சி மேற்கொண்டு வரு கிறது. நாட்டில் உள்ள எல்லா பொதுத்துறை நிறுவனங்களையும் சீரழித்துவிட்டு, பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழி யர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு, ஊழியர் விரோத நடவடிக்கை மேற்கொள்ளும் பாஜக ஒன்றிய அரசு, அதன் மாநில தலைவர் டேன்டீ  நிறுவனத்தை பாதுகாக்கிறோம் என போடு கிற வேடத்தை நீலகிரி மக்கள் ஒரு போதும்  நம்ப மாட்டார்கள். டேன்டீ நிறுவனத்தை பாது காக்கிற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தொழிலாளர்களை உள்ளடக்கி மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி  கேட்டுக்கொள்கிறது. 

1971-முதல்...

இதேபோல நீலகிரி மாவட்டத்தில் பல்லா யிரக்கணக்கான மக்கள் தங்கள் கைவசம் உள்ள நிலங்களுக்கு பட்டா வேண்டும் என்கிற கோரிக்  கையை தொடர்ந்து முன்வைத்து போராடி வரு கின்றனர். குறிப்பாக 1971-இல் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் இருந்த தோழர் ஏ.கே.கோபா லன் தலைமையில் துவங்கிய போராட்டம் ஐம் பது ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. 

பட்டா வழங்கிய கலைஞர்

தமிழகத்தில் ஏற்கனவே முதல்வராக கலை ஞர் இருந்தபோது 6 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு மூன்று ஏக்கர் என்கிற வகை யில் 18 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பட்டாவை  வழங்கினார். அதன்பிறகு இன்றுவரை இதர மக்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இப் போதும், ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனைப்  பட்டா, கைவசம் உள்ள விவசாய நிலங்களுக்கு பட்டா என்று 4900 ஏக்கர் நிலங்களுக்கு பட்டா  வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்கட்சி போராடி வருகிறது.  திமுக அரசு  இதனை பரிசீலித்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மின்இணைப்பு வழங்குக

இதுபோன்றே கூடலூர், பந்தலூர் பகுதி களில் வசிக்கும் மக்களுக்கு மின் இணைப்பு இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. வன விலங்குகள் அதிகம் வசிக்கிற இந்த பகுதி யில் மின்சாரம் என்பது மிகவும் அடிப்படையான ஒன்று. ஆகவே தமிழக அரசு மின் இணைப்பு இல்லாத பத்தாயிரத்திற்கும் அதிகமான வீடு களுக்கு உடனடியாக மின் இணைப்பை வழங்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். தமி ழக முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த வாக்கு றுதியை ஏற்கனவே அளித்திருக்கிறார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோடர் இன மக்களின் நிலங்கள் பறிப்பு

தோடர் இன பழங்குடியின மக்களின் நிலங்  கள் அரசின் வனத்துறையால் பறிக்கப்பட்டுள்  ளது. அந்த நிலங்களை தோடர் இன பழங்குடி மக்களுக்கு வழங்க வேண்டும். இம்மாவட்டத் தில் இருக்கிற சிறுகுறு தேயிலை விவசாயிகள் பச்சை தேயிலைக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமல் பொருளாதார ரீதியாக சிரமப்  பட்டு வருகிறார்கள். மாநில அரசு ஒன்றிய அர சோடு இணைந்து பச்சை தேயிலைக்கு கட்டுப் படியாகிற விலை கிடைக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, பேரவையில், கட்சியின் மாநி லக்குழு அலுவலக கட்டிட நிதியாக இரண்டரை லட்சம் ரூபாய் முதல் தவணை நிதி நீலகிரி  மாவட்டக்குழுவின் சார்பில் கே.பாலகிருஷ்ண னிடம் வழங்கப்பட்டது.