சென்னை,டிச.19- கடந்த சனிக்கிழமையன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வட பழனி தண்டாயுதபாணி திருக் கோயிலுக்கு தனது குடும்பத்தி னருடன் சென்றுள்ளார். தனது நீதிபதி அந்தஸ்தை பயன்படுத்தி விஐபி தரிசனம் செய்ய விரும் பாத நீதிபதி, சாதாரண மக்களைப் போல ரூ.50 மதிப் புள்ள சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகளைப் பெற்றுள் ளார். அப்போது கோயில் பணி யாளர், 50 ரூபாய்க்கான இரண்டு டிக்கெட்டையும், 5 ரூபாய்க்கான ஒரு டிக்கெட்டையும் கொடுத் துள்ளார். இதனால் அதிர்ச்சி யடைந்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிர மணியம் கோயில் பணியாள ரிடம் இதுகுறித்து கேள்வி எழுப் பியுள்ளார். அதற்கு பணியாளர், நீதிபதி என்று தெரியாமல் கடு மையாக நடந்துள்ளார். அந்தக் கோயிலில் பக்தர்கள் புகார ளிக்கும் வகையில், கோயில் செயல் அலுவலரின் தொலை பேசி எண்கள் உள்ளிட்டவை அடங்கிய விளம்பர பலகைகள் இல்லாததைக் கண்டு நீதிபதி மேலும் அதிர்ச்சியடைந்தார். அப்போது நீதிபதியின் மனைவி, தமிழக முதல்வரே கூட தனது தொலைபேசி எண்ணை பொதுமக்களுக்கு வழங்க தயங் காத நிலையில் ,கோயிலின் செயல் அலுவலர் எண்ணை கொடுக்க மறுப்பது ஏன் என்று கோயில் பணியாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அந்த பணியாளர், முதல்வர் வேண்டும் என்றால், கொடுக்கலாம். நான் தர மாட்டேன் என்று கூறியுள்ளார். பல கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகளைக் கொண்ட ஆண்டுக்கு ரூ.14 கோடி வரு வாய் கொண்ட இந்தக் கோயி லிலேயே இதுபோன்ற சூழல் நில வினால், தமிழகத்தில் உள்ள மற்ற கோயில்களின் நிலை என்ன வாக இருக்கும் என்று நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க உள்ளதாகவும், இந்துசமய அற நிலையத்துறை ஆணையர் இந்த முறைகேடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தி ருந்தார்.
இதன்படி, திங்களன்று (டிச.19) இந்த விவகாரம் குறித்து, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். அப்போது வடபழனி முருகன் கோயில் செயல் அலுவலர், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.முத்துகுமாருடன் ஆஜராகி யிருந்தார். அப்போது நீதிபதி, “இதுபோன்ற பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் இணை ஆணையர் அந்தஸ்தில் உள்ள வர்களை செயல் அலுவலர் களாக இந்துசமய அறநிலையத் துறை நியமிக்க வேண்டும். இதுபோன்ற விரும்பத்த காத நிகழ்வுகளுக்கு கோயி லின் செயல் அலுவலருக்கு சம அளவு பங்கு உள்ளது. எனவே, இதுபோன்ற முறைகேடுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கை களை இந்து சமய அறநிலையத் துறை எடுக்க வேண்டும். அதே போல், சம்பந்தப்பட்ட பணி யாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், இச்சம்பவம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சார்பில் அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி, விஐபி சலுகையை பயன் படுத்தாமல் செல்லும்போது தான், சில ஊழியர்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை தெரிந்துகொள்ள முடிகிறது என்று தெரிவித்தார். இந்த விவ காரம் குறித்து உரிய நட வடிக்கை எடுக்கப்பட்டு அது தொடர்பான அறிக்கை வரும் ஜனவரி இரண்டாவது வாரம் தாக்கல் செய்யப் படும் என்று அரசு தரப்பில் தெரி விக்கப்பட்டது.