states

மோடி அரசைக் கண்டித்து ஆக.25-31 இல் மக்கள் சந்திப்பு இயக்கம்

சென்னை, ஜூலை 22- மோடி அரசு  நாட்டு மக்கள் மீது கடும்  பொருளாதாரச் சுமைகளை ஏற்றி வைத்துள்ள தைக் கண்டித்தும் விவசாயிகள் மீதான கடன் சுமை,  சிறுபான்மையினர் மீது தாக்குதல், கருப்பு  சட்டங்கள், ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் ஆகிய வற்றைக் கண்டித்தும் மாற்றுக்கொள்கைகளை முன்வைத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் ஆகஸ்ட் 25-31 ஆகிய தேதிகளில் தமிழ கம் முழுவதும்  மக்கள் சந்திப்பு இயக்கம் மற்றும் ஜூலை 29 அன்று ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம்  ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில்  மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் தர்மபுரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஜூலை 22 அன்று கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மாவு  வகைகள், வெல்லம், மோர் உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சத விகிதம் விதிக்கப்பட்டு அமலுக்கு வந்துவிட்டது. ஒன்றிய அரசின் இந்த மக்கள் விரோத நட வடிக்கை, எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை யைக் கடுமையாக சீர்குலைக்கும். இது பேக் செய்யப்படாத, உதிரியாக வாங்குகிற பொருட்களுக்கு அமலாகாது என்ற நிதி அமைச்சர் விளக்கம் எடுபடவில்லை. கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்குவதும், உழைப்பாளி மக்களின் வாழ்வை ஒழித்துக்கட்டுவதுமான நவீன தாராள மய பாதையில் மோடி அரசு மேலும் மேலும் தீவிரமாக முன்னேறி செல்வதன் விளைவே இது. இச்சூழலில் ஏழை குடும்பங்களின் வாழ்வை பாதுகாக்க, 2022 ஜூலை 29ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றிய  அரசு அலுவலகங்கள் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட சிபிஎம் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. இவ்வியக்கத்தில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு ஒன்றிய அரசிற்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பிட மாநிலக்குழு வேண்டுகிறது.

குடும்பத்தில்  வன்முறை தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னையில் நடத்தப்பட்ட குடும்ப வன்முறை  எதிர்ப்பு மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், 2022 ஆகஸ்ட் 1-5 தேதிகளில், ஏதேனும் இரண்டு நாட்கள், வீடு வீடாகவும், கல்வி நிலையங்கள், பொது இடங்களிலும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்துவது என சிபிஎம் மாநிலக்குழு தீர்மானித்துள்ளது. சமத்துவம், ஜனநாயகம் மிக்க ஆரோக்கியமான குடும்பங்களை உருவாக்க வலியுறுத்தப்படும்.

75வது சுதந்திர தின நிகழ்வு

கட்சியின் மத்தியக்குழு முடிவின்  அடிப்படையில்,  ஆகஸ்ட் 9-15 ஆகிய தேதிகளில் மாவட்டங்களில் தேச விடுதலை போராட்ட விழுமியங் களை நினைவு படுத்தி, அரசியல் சாசனத்தின் சமத்துவ,  மதச்சார்பற்ற, ஜனநாயக அம்சங்களை உயர்த்திப் பிடிக்கும் நிகழ்ச்சிகள் நடத்திட சிபிஎம் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. அதனையொட்டி ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று கட்சியின் அனைத்து கிளைகளும் தேசிய கொடியேற்றி, அரசியல் சாசனத்தின் முகவுரையின் பேரில் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடத்துவது எனவும் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.

மக்கள் சந்திப்பு இயக்கம்

மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் ஆட்சியில், கடந்த 8 ஆண்டுகளில் பெரும்பகுதி மக்களின் மீது கடும் பொருளாதார சுமைகளை ஏற்றி வைத்திருப்பது, உச்சகட்ட வேலையின்மை, பெட்ரோல்-டீசல்-சமையல் எரிவாயு உள்ளிட்டு அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் மீது செங்குத்தான விலை உயர்வு, பொதுத்துறை தனியார்மயம், தொழிலாளர், தொழிற்சங்க உரிமை பறிப்பு, விவசாயிகள் மீதான கடன் சுமை, சிறுபான்மையினர் மீது தாக்குதல், கருப்பு சட்டங்கள், ஊடகங்களுக்கு அச்சுறுத்தல், பாசிச தன்மை கொண்ட எதேச்சதிகார நடவடிக்கைகள், பெண்கள், குழந்தைகள் மீது அதிகரித்து வரும் வன்முறை, பட்டியலின-பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்கள், வாழ்வாதாரம் பறிப்பு உள்ளிட்ட கார்ப்பரேட் ஆதரவு மதவெறி கொள்கைகளை  அம்பலப்படுத்தி, மாற்று கொள்கைகளை முன்வைத்து ஆகஸ்ட் 25-31 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மக்கள் சந்திப்பு  இயக்கம் நடத்திட மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.

மின்கட்டண உயர்வைக் கைவிடுக!

தமிழகத்தில் ரூ.55 முதல் ரூ.1130 வரை மின்கட்டணம் உயரும் என்று மாநில மின்துறை அமைச்சர் அறிவித்துள் ளார். 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவதற்கு இலவச மின்சாரம் தொடரும் என்று அறிவிக்கப் பட்டிருந்தாலும், இந்த மானியத்தை விட்டுத்தர விரும்பு பவர்கள் தாமாக முன்வந்து விட்டுத்தரலாம் என்று கூறி யிருப்பது பொதுமக்கள் மத்தியில் மின்சார கட்டணத் திற்கான மானியம் தொடருமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள உத்தேச மின்கட்டண உயர்வு நடுத்தர குடும்பத்தினருக்கும், வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வு, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வு அறிவிப்பு மேலும் கூடுதல் சுமையாக அமையும். எனவே, தமிழக அரசு உத்தேசித்துள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென சிபிஎம் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது. மேலும்,  தமிழக அரசு உத்தேசித்துள்ள மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மக்களை அணி திரட்டி மின்வாரிய தலைமை  பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் அலு வலகங்களில் பெருந்திரள் மனு கொடுக்கும் இயக்கம் நடத்திட சிபிஎம் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.