சென்னை, ஜன.27- சென்னையில் வெள்ளி யன்று (ஜன.27) ஜூடோ ரத்னத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், கூறியது: “ஒரு கன்னடப் படம். அதிலி ருந்துதான் எனக்கு பழக்க மானார். அதன்பிறகு தொடர்ந்து இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் நான் நடித்த எல்லா படங்களிலும் ஜூடோ சார்தான் சண்டைப் பயிற்சியாளர். அவருக் கென்று ஒரு ஸ்டைலை உரு வாக்கிக்கொண்டு திரையு லகத்திற்கு அறிமுகப்ப டுத்தினார். அவருடைய சிஷ்யர்கள் சுப்பராயன், தர்மா என்று எத்தனையோ பேர் மிகப் பெரிய சண்டைப் பயிற்சியா ளர்களாக வந்துள்ளனர். படத்தில் நடிக்கும் கதா நாயகன் மற்றும் அவரு டன் சண்டையிடும் பைஃட் மேன்களின் பாதுகாப்புக் குத்தான் அவர் முதலில் முக்கியத்துவம் கொடுப் பார். ரொம்ப மென்மை யான மனிதர். முரட்டுக் காளை படத்தின் ரயில் சண்டைக்காட்சி இப்போது வரை யாராலும் மறக்க முடி யாது. அந்த மாதிரி ஒரு மனி தரை சண்டைப் பயிற்சி யாளர்கள் மத்தியில் பார்ப் பது என்பது உண்மையா கவே ஆபூர்வமான ஒன்று. அவர் சரித்திரத்தில் சாதித்து மிகப்பெரிய ஒரு சாதனையை செய்து, பூரண வாழ்க்கை வாழ்ந்து 93 வயதில் அமரராகி இருக்கி றார். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று அவர் கூறினார்.