பெங்களூரு, மே 28 - “குடும்ப அரசியல் கட்சிகள் ஊழல் செய் கின்றன. இந்த கட்சிகள் ஒரு குடும்பத்துக்காக மட்டுமே செயல்படுகின்றன. இதனை நாடு பார்த்து வருகிறது. குடும்ப அரசியல் என்பது அரசியல் சார்ந்த பிரச்சனையாக உள்ளதோடு, ஜனநாய கம் மற்றும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய எதிரி யாக உள்ளது. குடும்ப கட்சி, வாரிசு அரசியலால் தான் இளைஞர்களுக்கு அரசியலில் வாய்ப்பு கிடைப்பது இல்லை’’ என்று பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்தில் பேசியிருந்தார். இதற்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி யின் (JDS) தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எச்.டி. குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் காட்டமான பதிலடியை கொடுத்துள் ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “குடும்பங்கள் நடத்தும் கட்சிகள்தான் நாட்டுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருப்பதா கவும், அரசியலில் பெரும் பிரச்சனையாக இருப்ப தாகவும் பிரதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். இது அவரது புதிய உபதேசமாக உள்ளது. நாட்டின் தற்போதைய நிலை குறித்து பேசுவதை விடுத்து, தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவது போல் பேசியி ருக்கிறார். காங்கிரஸ் பலவீனம் அடைந்துவிட்ட பிறகு பாஜக-வுக்கு மாநில கட்சிகளே சவாலாக திகழ்கின்றன. அதனால் குடும்ப அரசியல் என்ற கதையைக் கூறி வருகிறார். பிரதமர் மோடி இப்படி பேசுவதற்கு முன்பு பாஜக எப்படி வளர்ச்சி அடைந்தது என்பதைப் பார்க்க வேண்டும். ஜனசங்கம் என்பது பாஜக எனும் கட்சியாக உருமாறி மத்தியில் சொந்தமாக ஆட்சிக்கு வரவில்லை. குடும்பங்கள் நடத்தும் கட்சிகளின் உதவியுடன்தான் பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்தது. மத்தியில் தேசிய ஜன நாயக கூட்டணி எப்படி உருவானது? அதில் எத்தனை கட்சிகள் இருந்தன?. எந்தெந்த கட்சிகள் இருந்தன? என்பதை நினைவு கூற வேண்டும். தற்போது பாஜகவுக்கு 303 எம்.பி.க்கள் மக்களவையில் உள்ளனர். தொடக்க காலத்தில் அவர்களுக்கு எத்தனை எம்.பி.க்கள் இருந்தனர். பாஜகவின் பயணம் எப்படியாக இருந்தது என்பதை பிரதமர் மோடி படிக்க வேண்டும்.
குடும்ப அரசியலுக்கு எதிராக பேசும் மோடி, அவரது கட்சியில் இருக்கும் குடும்ப வாரிசுகள், ஊழல் குறித்து ஏன் பேசுவது இல்லை. சொல்லப் போனால் நாட்டிற்கு குடும்ப அரசியலால் அல்ல, பாஜக-வின் மதவாத அரசியலால்தான் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உணர்வுப் பூர்வமாக மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பவர்கள்தான் ஜன நாயகத்திற்கு உண்மையான எதிரிகள். பாஜக என்ற கட்சி குதிரை பேரத்தில் எம்எல்ஏ-க் களை வாங்கி ஆட்சியை பிடிக்கிறது. ஆயிரக்க ணக்கான கோடிகளை கொள்ளையடித்து பிற கட்சி எம்எல்ஏ-க்களுக்கு வழங்கி ஆட்சியை பிடிப்பது நாட்டுக்கு நல்லதா? இதுதான் நாட்டு இளைஞர்களுக்கான முன்னுதாரணமா? குதிரை பேரம் மூலம் மத்தியப் பிரதேசம், கர் நாடகம் என 2 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கவிழ்த்தது. கர்நாடகத்தில் 2 முறை பாஜக அரசு எப்படி வந்தது? நேர்மையான வழியில் பாஜக ஆட்சியை பிடித்ததா? எம்எல்ஏ-க்களை சந்தையில் மாடுகளை பேரம் பேசி வாங்குவது போல் வாங்கி பாஜக ஆட்சி அமைத்தது. இந்த ஊழல் அரசுக்கு பிரதமர் மோடி அனுமதி அளித்தது பொய்யா? ஆப ரேஷன் தாமரையை தேசியமயம் ஆக்கிய இந்த மோசமான அரசியலைக் கண்டும் பிரதமர் மோடி மவுனமாக இருந்தாரா இல்லையா? கர்நாடகத்தில் முதல்வர் பதவியை விற்பனை க்கு வைத்தது யார்? அந்த பதவிக்கு ரூ. 2,500கோடி கேட்டனர் என்று பாஜக எம்எல்ஏ-தான் கூறினார். அந்த எம்எல்ஏ மீது பாஜக நடவடிக்கை எடுத்ததா? குடும்ப அரசியலை முன்வைத்து மாநிலக் கட்சி களை அழிக்க நினைக்கும் பாஜக-வின் முயற்சி வெற்றி பெறாது. இந்தியா என்றால் பாஜக மட்டு மல்ல. 140 கோடி பேரை உள்ளடக்கியதுதான் இந்தியா. இதை மோடி புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன். இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.