கையில் சிகரெட்டுடன் இருக்கும் ‘காளி’ போஸ் டருக்கு எதிர்ப்பு தெரி வித்து ஆவணப்பட இயக்குநர் லீனா மணி மேகலை மீது சிலர் புகார் அளித்துள்ளனர்.
காத்மாண்டுவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் காவலாளி ஒருவர் தற் கொலை செய்துக் கொண் டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முகக்கவசம் கட்டாயம்
கடந்த 2 வாரங்களாக சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரு வதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி அறி வுறுத்தியுள்ளது. வணிக வளாகங்கள், திரையரங் கங்கள், துணிக்கடைகள் ஆகிய இடங்களில் வாடிக் கையாளர்கள்-ஊழியர்கள் முகக்கவசம் அணிவதை யும், தனிநபர் இடைவெளி யை கடைப்பிடிப்பதையும் அந்த நிறுவனங்கள் உறு திசெய்யவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் மீட்பு
பொள்ளாச்சி, ஜூலை 4- கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனை யில் யூனிஸ்-திவ்யபாரதி தம்பதியினருக்கு பிறந்த, 5 நாட்களே ஆன பெண் குழந்தை, ஞாயிறன்று காலை மர்ம நபர்களால் கடத்தப்பட்டது. சுமார் 250-க்கும் மேற்பட்ட கண் காணிப்பு கேமராக்களை சோதனை செய்ததில், 2 பேர் குழந்தையை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து திங்க ளன்று அதிகாலை, கேரளா மாநிலம் கொடுவாயூர் பகுதி யில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை மீட்டு பெற்றோ ரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை கடத்தியதில் ஒருவர் கைது செய்யப்பட்டி ருப்பதாகவும், மற்றொரு நபரை தேடி வருவதாகவும் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
பந்துவீச்சில் ஜாஸ்பிரிட் பும்ரா புதிய சாதனை!
இங்கிலாந்தில் ஆடிய டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை (21 விக்கெட்டுகள்) வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜாஸ்பிரிட் பும்ரா படைத்துள்ளார். 2021-22 ஆண்டிற்கான தொடரின் 5-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் புதிய சாதனைக்கு பும்ரா சொந்தக்காரர் ஆகியுள்ளார். புவனேஷ்வர் குமார் 2014-ஆம் ஆண்டு 19 விக்கெட்டுக்களையும், ஜாகீர் கான் 2007-ஆம் ஆண்டு 18 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 2018-ஆம் ஆண்டு 18, சுபாஷ் குப்தே 1959-ஆம் ஆண்டு 17 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியதே இதற்கு முந்தைய சாதனைகளாகும். டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒவரில் அதிக ரன்களை (29 ரன்கள்) எடுத்த சாதனையையும் இதே இன்னிங்ஸில் பும்ரா நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞர்களிடம் மோடிக்கு ஏன் இவ்வளவு பாகுபாடு?
“வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களின் எதிர்காலத்தைக் கூட பாதுகாக்கும் பிரதமர், சொந்த நாட்டு இளைஞர்களுக்கு வேலையில்லாமல் ஆக்கியுள்ளார். இந்த இளை ஞர்களிடம் ஏன் இவ்வளவு பாகுபாடு?” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய துணை ராணுவப் படை காவலர் தேர்வெ ழுதிய இளைஞர்களுக்கு இன்னும் பணி நியமனக் கடிதம் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கி இளைஞர்கள் போராடும் கணொலியையும் ராகுல் காந்தி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக அஜித் பவார் தேர்வு!
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே 164 வாக்குகளைப் பெற்று, நம்பிக்கை வாக்கெ டுப்பில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அவர் முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொண்டார். இந்நிலையில், எதிர்க்கட்சித்தலைவராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 288 உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் எதிர்க்கட்சியாக உள்ளது. அந்தக் கட்சிக்கு 53 உறுப்பினர்கள் உள்ள னர். இதையடுத்து, அஜித் பவார் எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக சபாநாயகர் ராகுல் நர்வேகர் அறிவித்தார். ‘அஜித் பவார் முதிர்ந்த அரசியல்வாதி மற்றும் மிகச்சிறந்த நிர்வாகி’ என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பாராட்டு தெரிவித்தார்.
இது இ.டி. கூட்டணி ஆட்சிதான்: பட்னாவிஸ் ஒப்புதல்
“மகாராஷ்டிர சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சில எம்எல்ஏ-க்கள் எங் களை (அமலாக்கத்துறை கூட்டணி என்ற பொருள்படும் வகையில்) இ.டி. (Enforcement Directorate - ET)- கூட்டணி என்று கோஷம் எழுப்பினர். ஆமாம் நாங்கள் ED (Eknath shinde - Devendra fadnavis) ஆட்சியைத்தான் அமைத்துள்ளோம். ஏக்நாத் ஷிண்டே - தேவேந்திர பட்னாவிஸ் இருவரும் இணைந்த கூட்டணி” என்று பாஜக தலைவரும், மகாராஷ்டிர மாநில துணைமுதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.
பயங்கரவாதியுடன் தொடர்பு? பாஜக ஐ.டி. பிரிவு அலறல்!
ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டம், டக்சன் தோக் கிராமத்தில் பதுங்கியிருந்த ‘லஷ்கர் இ தொய்பா’ பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் தலீப் உசேன் ஷா மற்றும் அவரது கூட்டாளி பைசல் அகமது தர் ஆகியோரை, ஞாயிறன்று பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இதனிடையே, பயங்கரவாதிகளில் ஒருவரான உசேன் ஷா, பாஜகவின் ஐ.டி. பிரிவு பொறுப்பாளர் என்று தகவல்கள் வெளியாகின. அவர் பாஜக தலை வர்களுடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகின. இந்நிலையில், உசேன் ஷா, பாஜக ஐ.டி. பிரிவின் பொறுப்பில் இல்லை. இது போலியான செய்தி என்று பாஜக-வின் ஐ.டி. பிரிவு மறுப்பு தெரிவித்துள்ளது.
சமாஜ்வாதி கட்சி அமைப்புகளை கலைத்தார் அகிலேஷ்!
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் கட்சித் தலைவர் பதவி தவிர தேசியத் தலை வர்கள், மாநிலத் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட நிர்வாக அமைப்புகள் என ஒட்டுமொத்த சமாஜ்வாதி கட்சி அமைப்புகளும் கலைக்கப்படுவதாக அகிலேஷ் தமது டுவிட்டரில் அறிவித்திருக்கிறார். தங்களுக்கு செல்வாக்குமிக்க ராம்பூர், ஆஸம்கார் மக்களவைத் தொகுதிகள் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வசம் போனதால், அகிலேஷ் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம்!
மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வைப் போல, இந்தியாவில் உள்ள 42 மத்தியப் பல்க லைக்கழகங்களில் எம்.ஏ., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி. உள்ளிட்ட முதுகலை படிப்பு களில் சேர்வதற்கும் ‘கியூட்’ (CUET) எனப்படும் பொதுநுழைவுத் தேர்வை மோடி அரசு இந்தாண்டு முதல் கொண்டு வந்துள்ளது. கணினி முறையில் ஜூலை மாத இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கியூட் அடிப்படையிலான முதுகலை பட்டப்படிப்பு தேர்வுக்கு https://cuet.nta.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்க ஜூலை 10-ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
பாஜக - ஷிண்டே கூட்டணி மக்களிடம் செல்ல முடியாது!
“ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனாவிலிருந்து உத்தவ் தாக்கரே நீக்கிவிட்டார். அதன்பிறகு ஷிண்டே எப்படி சிவசேனா என்று சொல்லிக்கொள்ள முடியும்? சிவசேனா என்றால் தாக்கரே தான். இதுகுறித்து நாங்கள் கண்டிப்பாக நீதிமன்றம் செல்வோம்” என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். “அத்துடன், ‘பாஜக & ஷிண்டே கூட்டணி தற்காலிக ஏற்பாடு தான். அவர்களால் மக்களிடம் செல்ல முடியாது. மும்பை தாக்குதல் பயங்கரவாதியான கசாப்புக்குக்கூட அவ்வளவு பாதுகாப்பு இல்லை. ஆனால் அவர்கள் மும்பை சென்றபோது அதைவிட அதிக பாதுகாப்பு இருந்தது. நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பிய சஞ்சய் ராவத் “நாங்கள் பலமாக இருக்கிறோம். எங்கள் கட்சி ஒருபோதும் பலவீனமடையாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.