states

பணக்கார நாடுகளுக்கு ஜால்ரா அடிக்கும் உட்டோ!

‘உட்டோ’ எனும் உலக வர்த்தக அமைப்பு (WTO) 1948 முதல் 1994 வரை ‘காட்’ ஒப்பந்  தம் (வணிகம் மற்றும் காப்பு வரி குறித்த பொது உடன்  பாடு) என்ற அமைப்பாக செயல்பட்டு வந்தது. 1-1- 1995-ல்  உலக வர்த்தக அமைப்பாக இது உருமாறியது. உரு மாறிய கொரோனா போல், உலகின் ஏழை எளிய மக்க ளின் நலன்களுக்கு எதிராகவே உட்டோ செயல்பட்டு வருகிறது. 164 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மட்ட மாநாடு நடைபெறும். 11 ஆவது மாநாடு அர்ஜென்டினாவின் பியூனெஸ் அயர்ஸில் 2017-ல் கூடியது. 5 ஆண்டுக்கு பிறகு 2022 ஜூன் 12-இல் 12வது மாநாடு ஜெனிவாவில் துவங்கி 16 வரை  நடைபெற்றது. 2020-இல் கொரோனா பெரும் தொற்று  நோய் பரவிய சில மாதங்களிலேயே, இந்திய அரசும்,  தென்னாப்பிரிக்க அரசும் தடுப்பூசி ,மருந்துகள் கண்டு பிடிக்கும் தொழில்நுட்பம் குறித்த அறிவுசார் சொத்துரி மையை தளர்த்த வேண்டும் என உட்டோவிடம் முறை யிட்டன. கடந்த 2 ஆண்டுகளாக உட்டோ இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. 

12வது மாநாடு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய தடை இல்லை என மட்டும் அறிவித்துள்ளது. இது பெரிய பன்னாட்டு மருந்து தடுப்பூசி கம்பெனிகளின் லாபத்தை தான் பாதுகாக்கும். எளிய மக்களுக்கு பயனளிக்காது. குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் இன்னமும் 15 சதவீத மக்களே தடுப்பூசி போட்டு உள்ளனர்.  நூறு நாடுகளுக்கு மேல் தடுப்பூசி குறித்த கண்டு பிடிப்பு உரிமைகள் தளர்த்தப்பட வேண்டும் என  குரல் கொடுத்தும் ஐரோப்பிய யூனியன் ,அமெரிக்கா சம்மதிக்காததால் அறிவுசார் சொத்துரிமை தளர்த்தப்  படவில்லை. உலக அளவில் 60 லட்சம் பேர் கொரோனா வினால் இறந்த பிறகும் உட்டோ அடம்பிடிப்பது சரியான  நடைமுறை அல்ல. அறுபது லட்சம் என்பது அரசுகள்  அளித்த அதிகாரப்பூர்வமான கணக்கு. உண்மையில் 2 கோடி பேர் இறந்திருக்கக்கூடும்.

சுவிட்சர்லாந்து தலைநகரம் ஜெனிவாவில் உட்டோ  தலைமை அலுவலகம் உள்ளது. 12- வது அமைச்சர்கள் மட்ட மாநாடு நடைபெற்றபோது விவசாயிகளும் மீன வர்களும் உட்டோ விவசாயத்துறை குறித்து விவா திக்கவோ, முடிவுகள் எடுக்கவோ கூடாது என ஆர்ப்பாட்  டம் செய்தனர். சிறு விவசாயிகளின் நலன்களை ,உணவு  தன்னிறைவு இறையாண்மையை உட்டோ நீர்த்துப் போகச் செய்கிறது என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்  சாட்டினர். லா வயா கேம்பெசினா என்பது 80 நாடுகளில் உள்ள 180 விவசாய அமைப்புகள், பூர்வீக குடி மக்கள் அமைப்புகள் மற்றும் கிராமப்புற உழைப்பாளி களின் அமைப்புகள் இணைந்த அமைப்பாகும். இந்த அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . பொது விநியோகம் காத்திட அரசு உணவு தானி யங்களை கொள்முதல் செய்வதை, அரசு ஏதோ பதுக்க லில் ஈடுபடுவது போல் மாநாட்டில் பணக்கார நாடுகளின்  பிரதிநிதிகள் பேசினார்கள். உணவு தானிய உற்பத்திக்கு  மானியம் வழங்கக்கூடாது என பேசினார்கள். பணக்கார நாடுகள் தாராளமாய் மானியம் வழங்கலாம்; வளர்ந்து வரும் நாடுகள் மானியம் வழங்கக்கூடாதாம்!