சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தல்
விஜயவாடா, செப்.25- பிரதமர் மோடியின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் மதச்சார்பற்ற சக்தி களுடன் சேர ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விரும்புகிறாரா அல்லது பாஜக தலை மையிலான ஆளும் கூட்டணிக்கு மறைமுக மாக ஆதரவளிக்க விரும்புகிறாரா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தினார். விஜயவாடாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத் தில் கலந்துகொண்டு பேசிய யெச்சூரி, மோடி அரசை வெளியேற்ற மதச்சார்பற்ற முன்னணி யின் அவசியத்தை வலியுறுத்தினார். சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் இந்தியா இவ்வ ளவு மோசமான நிலையில் இருந்ததில்லை என்பதை சுட்டிக்காட்டிய யெச்சூரி, “பாஜக வுக்கு எதிரான சக்திகள் ஒன்று சேராவிட்டால் நாட்டின் நிலை கேள்விக்குறியாகிவிடும். ஆந்தி ரப் பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண் டும்” என்றார். மேலும், “கடந்த ஏழு ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்த நிலையில் உள் ளது. அதை சீரமைப்பதற்கான அறிகுறிகள் இல்லை. கார்ப்பரேட்கள் வாங்கிய ரூ.11 லட்சம் கோடி வங்கிக் கடன்களை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளளது. ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு வரிச்சலுகையும் வழங்கியுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட் டது. ஒரு பகுதி மக்கள் வேலை தேடுவதை நிறுத்திவிட்டனர். மற்றொருபுறத்தில் ஒன்றிய அரசு 10லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப மறுத்துவருகிறது.
கொரோனா தொற்றுப் பரவலால் பெரும் பாலான தொழில்கள், குறிப்பாக சிறு தொழில் கள் மூடப்பட்டன. மறுபுறம். விலைவாசி உயர்வால் மக்களின் வாழ்க்கையை பரிதாப மாகரமாக மாறிவிட்டது. மற்றொருபுறத்தில் பிரதமர் மோடி, கௌதம் அதானியை உலகின் பணக்காரர் பட்டி யலில் இடம்பெறச் செய்துள்ளார். வேதாந்தா நிறுவனத்திற்கு ரூ.80 ஆயிரம் கோடி மானி யம் வழங்கியுள்ளார் என்றும் யெச்சூரி சாடி னார். மேலும் பேசிய அவர், “ஆசைகாட்டி சட்ட மன்ற உறுப்பினர்களை விலை பேசுவது அல்லது மிரட்டுவதன் மூலம் பல மாநிலங்க ளில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. சிபிஐ அல்லது அமலாக்கப் பிரிவின் சோதனைகள் பாஜக அரசியல் விளையாட்டின் ஒரு பகுதி. கோவா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சிபிஐ, அமலாக்கத்துறையை தனது அரசியல் விளையாட்டிற்கு பயன்படுத்தியுள்ளது மோடி அரசு. முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கிறது. பெண் களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டமே தாக்குதலுக்கு உள் ளாகியுள்ளது. இந்தச் சூழலில் பாஜகவிற்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயம்” என்றும் கூறினார்.