states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பாஜகவினருக்கு கட்டி அல்ல; இடித்துத்தான் பழக்கம்!

“கர்நாடகத்திலுள்ள பாஜக ஆட்சியாளர்கள், பள்ளிக் கட்டடங்களுக்கு காவி நிறத்தை பூச  திட்டமிட்டுள்ளனர். இதனால் கற்றலின் முக்கியத்துவம் போய்விடும். மைசூருவில் பேருந்து நிறுத்தம், மசூதி போல் கட்டப்பட்டுள்ளதை இடிப்பதாக பிரதாப் சிம்ஹா கூறியுள்ளார். அவர்களுக்கு புதிதாக கட்டடங்களைக் கட்டிப் பழக்கமில்லை. இடித்துத்தான் பழக்கம். மக்களுக்கு நிழல் கொடுப்பது தான் முக்கியம். நிழல்கொடுக்க பேருந்து நிறுத்த நிழற்குடை எப்படி இருந்தால் என்ன?” என்று  மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி. குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “கோலார் தொகுதியில் பாஜக-வுடன் நாங்கள் எந்த விதமான ரகசிய கூட்டணியும் வைத்துக்கொள்ளவில்லை. அதுதொடர்பாக நாங்கள் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. சித்தராமையாவை தோற்கடிக்க நாங்கள் பாஜக-வுடன் கூட்டு சேர்ந்து செயல்பட மாட்டோம்” என்றும் கூறியுள்ளார்.

ராமர் கோயில் கருவறைக் கதவை திறந்தவர் ராஜீவ் காந்திதான்!

“பாபர் மசூதிக்குள் ராமர் கோயில் கதவுகளை திறந்தது காங்கிரஸ். கருவறையில் பூஜை செய்ய அனுமதித்ததில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முக்கியப் பங்காற்றினார். அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதாக பாஜக கூறுகிறது. இருந்தாலும், ராமர் கோயில் கரு வறைக் கதவுகளைத் திறந்து வைத்தவர் ராஜீவ் காந்தி என்பதுதான் உண்மை” என்று கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பசவராஜ் ராயரெட்டி கூறியுள்ளார். ஆனால், 2023 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக இந்துக்களை திருப்திப்படுத்தும் முயற்சியாகவே காங்கிரஸ் தலைவர் (பசவராஜ் ராயரெட்டி) இந்த கருத்தை தெரிவித்திருப்பதாக பாஜக எம்எல்ஏ பாரத் ஷெட்டி பதிலளித்துள்ளார்.

ஆம் ஆத்மி, மஜ்லிஸ் கட்சிகள், பாஜகவின் ‘பி’ டீமே!

“குஜராத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி மற்றும் அசாதுதீன் ஒவைசி யின் மஜ்லிஸ் கட்சிகளைப் பொறுத்தவரை, இந்த கட்சிகள் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) ‘காங்கிரஸ்-முக்த் பாரத்’ மற்றும் ‘பாஜகவின் பி-டீம்’ ஆகியவற்றின் ஒரு பகுதியாகவே இருக்கும். இதனை பல ஆண்டுகளாக நான் கூறி வருகிறேன். இரு கட்சிகளும் மற்ற கட்சிகளின் வாக்கு களை குறைக்கவே தேர்தலில் போட்டியிடுகின்றன. இதனால் பாஜக-வுக்கே நன்மை கிடைக்கும்” என்று காங்கிரஸ் முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் கூறியுள்ளார். மேலும், பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கிய ஒரு மாதத்திற்குள் பகவத் மதரஸா மற்றும் மசூதிக்கு செல்லத் தொடங்கி விட்டதாகவும், சில நாட்களில் மோடியும் கூட ‘குல்லா’ அணியத் தொடங்குவார் என்றும் திக் விஜய் சிங் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்பிஐ வங்கியும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது!

பொதுத்துறையைச் சேர்ந்த பரோடா வங்கி (BOB), இந்தியன் வங்கி (Indian Bank), தனியார் துறையைச் சேர்ந்த ஐசிஐசிஐ (ICICI) வங்கி ஆகியவை எம்சிஎல்ஆர் (Marginal Cost of Funds Based Landing Rate - MCLR) வகை கடன்களுக்கான வட்டி விகிதத்தை  அண்மையில் உயர்த்தின. பரோடா வங்கி 15 புள்ளிகள் வரையும், இந்தியன் வங்கி 35 புள்ளிகள் வரையும், ஐசிஐசிஐ வங்கி 20 புள்ளிகள் வரையும் கடன் வட்டி விகிதத்தை உயர்த்தின. இந்த வரிசையில், நாட்டின் முக்கிய வங்கியான ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’வும் கடன்களுக்கான எம்.சி.எல்.ஆர்., அடிப்படையிலான வட்டி விகிதத்தை, 10 முதல் 15 அடிப்படைப் புள்ளிகள் வரை  உயர்த்தியுள்ளது.

டிம்பிளுக்கு எதிராக சமாஜ்வாதியிலேயே ஆள்பிடித்த பாஜக!

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், உ.பி. மாநிலம் மெயின்புரி தொகுதி எம்.பி.யுமான முலா யம் சிங் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி காலமானார். இதையடுத்து, மெயின்புரி தொகுதிக்கு  டிசம்பர் 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சமாஜ்வாதி சார்பில், முலா யம் சிங்கின் மருமகளும், அகிலேஷின் மனைவியுமான டிம்பிள் (44) வேட்புமனு தாக்கல் செய்துள்  ளார். இந்நிலையில், பாஜக வேட்பாளராக ரகுராஜ் சிங் சாக்யா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் ஆவார். மேலும், முலாயம் சிங்கின் தம்பி சிவ பால் யாதவின் வலதுகரமாக கருதப்படுபவர் ஆவார்.

ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தை  எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ்

சென்னை, நவ. 16- ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் திரும்பப்பெறப்பட்டுள்ளன. ஆன்லைன் விளையாட்டுக்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் அவசரச் சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்துக்குத் தடை விதிக்க கோரியும், ரத்து செய்யக் கோரியும், மும்பையைச் சேர்ந்த அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், அவசரச் சட்டம் பிறப்பிக் கப்பட்ட போதும் அது அமலுக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை என்பதால் இந்த வழக்கை தொடர எந்தக் காரணமும் இல்லை என தெரிவித்தார். மேலும், அவசரச் சட்டத்துக்குப் பதிலாக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தாகவும் குறிப்பிட்டார். ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஆரியமா சுந்தரம், முகுல் ரோத்தகி, சதீஷ் பராசரன் ஆகி யோர், அவசரச் சட்டம் அமலுக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டா லும் கூட அது அமலில் உள்ள சட்டமாகத்தான் கருத வேண்டும் என்றும் அவசரச் சட்டத்திற்கு மாற்றாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகுதான் அவசரச் சட்டம் காலாவதியாகும் என குறிப்பிட்டனர். அவசரச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முனைப்பு காட்டு வதால் அது அமலுக்கு வரும் தேதி அறிவித்த சில நாட்கள் வரை நிறுவனங்க ளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நீதிபதிகள், அவசரச் சட்டம் அமலுக்கு வரும் தேதி இன்னும் அறிவிக்காத நிலையில் இந்த வழக்கு தொடர்வ தற்கு எந்த காரணமும் இல்லை என குறிப்பிட்டனர். மனுதாரர்கள் தரப்பில் அவசரச் சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவித்த பிறகு புதிதாக வழக்கு தொ டர்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்டு வழக்கை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்த நீதி பதிகள் அவசரச் சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவித்த பிறகு வழக்கு தொடர் வதற்கு ஆன்லைன் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தும்உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் நவ.19 வரை மிதமான மழை: 

சென்னை, நவ. 16- தமிழகத்தில் 19ஆம் தேதி வரை ஒரு சில  இடங்களில் மிதமான மழையும், இம்மாதம்  20ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழையும்  பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு  மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக வரும்  19ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்க ளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 20ஆம் தேதி கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிக ளில் பல இடங்கள், உள் தமிழக மாவட்டங்க ளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலு டன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக் கூடும். திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர்,  விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதி களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய  வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சபரிமலை பக்தர்களுக்கு 24 மணி நேர தகவல் மையம்

சென்னை, நவ. 16- தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்வோருக்கு உதவ சென்னையில் 24  மணி நேரமும் இயங்கும் தகவல் மையம்  திறக்கப்பட உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித் துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயில் வியாழக் கிழமை (நவ. 17) முதல் அடுத்த மாதம்  27ஆம் தேதி வரை மொத்தம் 41 நாட்க ளுக்கு திறந்து வைக்கப்படும்.இதை  யொட்டி வியாழக்கிழமை (நவ. 17) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சிறு வழிப்பாதை, பெரு வழிப்பாதை  என அனைத்து பாதைகள் வழியாகவும் செல்லலாம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை செல்வோருக்கு உதவ  சென்னையில் இந்து சமய அறநிலை யத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்துள்ளார். சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் தமிழ்நாடு பக்தர்களுக்கு உதவுவதற்காக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகை யில் தகவல் மையம் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. இத்தகவல் மையம் நவம்பர் 16ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரை செயல்படும். இந்த தகவல் மையத்தின் சேவையை கட்டணமில்லா தொலைப்பேசி எண். 044-28339999 இல் அழைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.

வீட்டு வசதி வாரிய  வீடுகள் வாடகைக்கு விடப்படும்: அமைச்சர்

சென்னை, நவ. 16- வீட்டு வசதி வாரிய  வீடுகள் வாடகைக்கு  விடப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துச்சாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வீட்டு வசதி வாரிய வீடுகளில்   ஏறத்தாழ 8,000 வீடுகள் விற்கப்படாமல் உள்ளன. அவற்றை விற்க முயற்சி செய்கிறோம். இல்லை என்றால் வாடகை வீடாக மாற்ற உள்ளோம். மேலும் கோயமுத்தூர், ஈரோடு, உள்ளிட்ட 16 மாவட்டங்களில் வீட்டு வசதி  வாரிய குடியிருப்புகளில் அபராத தொகை  செலுத்தாதவர்களுக்கு 53 கோடி ரூபாய் அபராத வட்டி தொகை தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது என்றும் அவர்  தெரிவித்தார்.