கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு அமர்நாத் யாத்திரை வியாழனன்று துவங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. இதனி டையே, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி பாந்தா சவுக் பகுதியில் உள்ள கடைகளை மூடுமாறு காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு அந்தப் பகுதி வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், “அமர்நாத் யாத்திரை செல்பவர்களுக்கு உண்மையான பாதுகாப்பு உணர்வை வழங்குபவர்களே காஷ்மீர் மக்களாகிய நாங்கள்தான்” என அம்மாநில முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலை வருமான மெகபூபா முப்தி கூறியுள்ளார்.