states

img

ரேசன் கடைகளில் கை ரேகைக்கு மாற்றாக கருவிழி சரிபார்ப்பு

சென்னை,ஏப்.26- சட்டப்பேரவையில் செவ்வாயன்று (ஏப்.26) கேள்வி நேரத்திற்கு பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, “நியாய விலைக் கடைகளில் கை ரேகை வைக்கும் முறையில் தொடர்ந்து சிக்கல் ஏற்படுகிறது. எனவே அதற்கு  பதில்  நவீன முறை கொண்டு வரப்படுமா? என்றார். இதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் அர.சக்கர பாணி,“நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும்போது விரல் ரேகை சரிபார்ப்பு முறையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறித்து தொடர்ந்த புகார்  வந்துகொண்டிருக்கிறது. அதனை சரிசெய்யும் நடவடிக்கை களில் துறை தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளது. இருந்தாலும், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கருவிழி சரிப்பார்க்கும்  முறை பின்பற்றப்படுகிறது. அந்த முறையை தமிழ்நாட்டில்  முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் நடைமுறைப் படுத்த திட்டமிட்டுள்ளோம். அதில் கிடைக்கும் அனுபவங் களை கொண்டு பிறகு மாநிலம் முழுவதும் பிற பகுதிக ளுக்கும் விரிவுப்படுத்தப்படும்” என்றார்.