states

img

பசுமைப் பேருந்துகள் அறிமுகம்

சென்னை,ஜன.9- தமிழகத்தில் தற்போதுள்ள பழைய பேருந்துகளை மாற்றி சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய பசுமைப் பேருந்து களை அறிமுகப்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,213 பிஎஸ் நான்கு பேருந்துகள் மற்றும் 500 மின்சாரப்  பேருந்துகள் கே.எப்.டபிள்யூ நிதியிலும், 1,000 பிஎஸ் நான்கு பேருந்துகள் மாநில அரசு நிதியுதவியிலும் கொள்முதல்  செய்யப்பட்டு, இவ்வாண்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். 63,246 கோடி ரூபாய் மதிப்பில் 118.9 கி.மீ. நீளமுள்ள சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள்  துரிதமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் குவிந்துகிடக்கும் சுற்றுலா வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி, சுற்றுலா சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஓர் ஒருங்கி ணைந்த அணுகுமுறையை அரசு பின்பற்றுகிறது. சுற்றுலாப்  பயணிகளுக்கு தனித்துவமான அனுபவங்களை ஏற்படுத்த வும், உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்களில் சாகசச் சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா மையங் கள் அமைக்கப்பட்டு வருகின்றன.