states

தஞ்சை தேர் விபத்து: முழுமையான விசாரணைக்கு பின் அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும்

தஞ்சாவூர், மே 1- தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில், கடந்த ஏப்.27 ஆம் தேதி நடைபெற்ற அப்பர் சதய  விழாவையொட்டி, வீதி உலாவில் தாழ்வாக சென்ற  உயரழுத்த மின் கம்பியில், தேர் பட்டதால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 17 பேர் படுகாயமடைந்து தஞ்சாவூர் மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தொடர்ந்து, விபத்து குறித்து விசா ரிக்க வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில், ஒருநபர் குழுவை தமிழக  அரசு அமைத்துள்ளது. இக்குழு, இரண்டாம் நாளாக களிமேடு சென்று ஆய்வு செய்து, விபத்து நடந்த இடத்தில், சேதமடைந்த நிலை யில் உள்ள தேர் உள்ளிட்டவற்றை புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.  பின்னர் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவல கத்தில், வருவாய் துறை செயலர் குமார் ஜெயந்த் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், “கிராம மக்களிடம் விபத்து குறித்து தெரிவிக்கலாம் என கூறிய நிலையில், பல பேர் வந்திருந்து தங்க ளின் கருத்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் கிராமத்திற்கு சென்று  விசாரித்துள்ளோம். அத்துடன் கிராமமக்கள் விபத்து குறித்து தெரிவிக்க ஆட்சியர் அலுவல கத்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

முதல் நாள் 8 அலுவலர்கள், 12 கிராம மக்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர். மருத்துவமனை யில் சிகிச்சை பெறுவர்களின் சிகிச்சை விப ரங்கள், மின்சாரத் துறை விபரங்கள், அதிகாரி கள் அளித்த தகவல் எல்லாவற்றையும் சேகரித் துள்ளோம்.  முதற்கட்டமாக விபத்தை நேரில் பார்த்த வர்களிடம் விசாரணை செய்து வருகிறோம். இதன் அடிப்படையில் தான் அறிக்கை தயார் செய்ய உள்ளோம். தேவைப்பட்டால் தொடர்ந்து விசாரணை நடைபெறும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்கள், டிஸ்சார்ஜ் ஆன பிறகு, அவர்களிடம் தனியாக விசாரிக்கப்படும். முழுமையான விசாரணைக்கு பிறகுதான் அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும்” என்றார். இதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்  டம், திருச்செங்காட்டங்குடி கோயில் திருவிழா வில், சப்பரத்தில் சிக்கி தீபன்ராஜ் என்பவர் உயிரி ழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த நாகை புறப்பட்டு சென்றார்.