states

எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள அரசு தயார்

சென்னை, நவ.13-  பருவமழை பணிகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தேவையில்லை, பொதுமக்களின் பாராட்டே போதும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சென்னையில் கடந்த சில நாட்க ளாக விட்டு விட்டு மழை பெய்து வரு கிறது. சில நாட்களில் கனமழையும் பெய்தது. இதன் காரணமாக சென்னை யில் ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கியது.  இந்நிலையில் சென்னை மாநக ராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதி களில் பருவமழை காரணமாக மேற் கொள்ளப்பட்டு வரும் முன்னெச் சரிக்கைப் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஞாயிறன்று  (நவ.13) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டார். சென்னை திரு.வி.க.நகர் மண்டல அலுவலகம், ஓட்டேரி நல்லா பாலம், ஸ்டீபன்சன் சாலை, பல்லவன் சாலை, பல்லவன் சாலை வீட்டுவசதி வாரி யம், 70 அடி சாலையில் வண்ணான் குட்டை சந்திப்பு, கொளத்தூர் சட்ட மன்ற அலுவலகம், வீனஸ் காலனியில் 100 அடி சாலை ஆகிய பகுதிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது செய்தி யாளர்களிடம் பேசிய அவர், “எவ்வ ளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள அரசும், மாநக ராட்சியும் தயார் நிலையில் உள்ளன. வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளுடன் ஒருங்கி ணைந்து அரசு சிறப்பாக செயல்பப்ட வருகிறது. பிரச்சனை ஒன்றும் இல்லை. எதிர்கட்சியினரின் விமர்சனங்களைக் கடந்து, பொதுமக்கள் பாராட்டி வரு கின்றனர். பொதுமக்கள் எங்களை பாராட்டினால் போதும்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். துரைமுருகன் பேட்டி  சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் தேக்க ங்களுக்கு தண்ணீர் வரத்து அதி கரித்துள்ளது. ஞாயிறன்று  காலை 8.00 மணி நிலவரப்படி செம்பரம்பாக் கத்தில் 20.50 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் செம்பரம்பாக் கத்திற்கு 2,187 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1,156 கன அடி நீர் திறந்து விடப்படு கிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். இதனைத் தோடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய அவர், “செம்ப ரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதி கரித்தாலும் பிரச்சினை இல்லை. 16ம் தேதிக்குப் பிறகு மீண்டும் மழை தொடங்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அனைத்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட் டுள்ளன” என்றார்.