states

முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கில் தொடர்புடையவர்களிடம் விசாரணை

திண்டுக்கல்,செப்.27-  திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக முன்னாள் எம்எல்ஏ பாலன் கொலை வழக்கில் தொடர்புடையவர்களிடம்  செவ்வாயன்று சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரணை நடத்தி னர். தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் .இவர் 2012 மார்ச் 29 இல் நடைபயிற்சி சென்றபோது, கடத்திச் செல்லப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்.  தமிழ்நாட்டையே பரபரப்பாக்கிய இச்சம்பவத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த நரைமுடி கணேசன், புதுக்கோட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோ ரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கும் சிறப்பு புலனாய்வு குழுவினர், மேலும் திண்டுக்கல்லைச் சேர்ந்த கொசு தினேஷ் உட்பட நான்கு  பேரிடம்   தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் சென்னையைச் சேர்ந்த எம்எல்ஏ பாலன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள். இந்நிலையில்  ராம ஜெயம் கொலை வழக்கில்  சிறப்பு புலனாய்வு குழு வினர் இவர்களிடம் திருவெறும்பூர் பழைய காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பின்னர் திண்டுக்கல்லைச் சேர்ந்த கொசு தினேஷ், தூத்துக்குடியைச் சேர்ந்த மற் றொருவரை விடுவித்தனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த  செந்தில், திண்டுக்கல்லைச் சேர்ந்த நரைமுடி கணேசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;