states

விலைவாசி உயர்வு: இரா.முத்தரசன் விமர்சனம்

சென்னை,மார்ச் 31- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் ஒன்றிய அரசு  படுதோல்வி அடைந்து விட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: பாஜக ஒன்றிய அரசு பன்னாட்டு நிதி மூலதன சக்திக ளுக்கும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஆதரவான கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகை வழங்கி வரும் பாஜக ஒன்றிய  அரசு மறைமுக வரி செலுத்தி வரும்  உழைக்கும் மக்களை கசக்கி பிழிந்து பெருந்தொகை வசூலித்து  வருகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம்  மாநிலங்களின் நிதி ஆதாரத் தையும் ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில் கடந்த 137 நாட்களாக பதுங்கியிருந்த ஒன்றிய  அரசின் எண்ணெய் நிறுவனங் கள் 9 நாட்களில் பெட்ரோல் விலை  6 ரூபாய் 54 காசுகள் உயர்த்தி யுள்ளது. இது இன்னும் சில நாட்கள் தொடர்ந்து ரூ. 20 வரை உயரும் எனக் கூறப்படுகிறது. டீசல் விலையையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. போக்கு வரத்து வாடகை உயர்வில் தொடங்கி அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்  அனைத்தும் உயர்ந்து வரு கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.