கீவ் சென்று வந்த பிறகு பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதி பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் தொலைபேசியில் உரையாடியது இரண்டுக்கும் இடையிலான மோதலில் அமைதியை ஏற்படுத்த புதுதில்லி தயார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் சபைக்கு மோடியின் பயணம், அங்கு அவர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்திக்க இருப்பது, மேலும் அக்டோபரில் பிரிக்ஸ் மாநாட்டிற்காக ரஷ்யாவிற்கு மற்றொரு பயணம் ஆகியவை யும் அந்த நம்பிக்கையைத் தூண்டி யுள்ளன. இந்தியாவின் நிலைபாட்டையும் சூழ்நிலையையும் பரிசீலிப்பதன் மூலம் அதன் தலையீடு பற்றிய ஊகங்களை ஊக்குவிப்பவர்கள் பயனடையலாம். ஆனால், சமாதான முயற்சிகளில் இருந்து தன்னை இந்தியா துண்டித்துக் கொண்டுள் ளது. 2022 ஆம் ஆண்டில் உக்ரைன் மீதான ரஷ்யப் படையின் படையெடுப்பை ஜெய்சங்கர் “ஐரோப்பியப் போர்” என்று அழைத்ததன் விளைவிலிருந்தும் ரஷ்யாவையும் உக்ரைனையும் பேச்சு வார்த்தைக்கு கொண்டு வராத எந்த சமா தான முன்னெடுப்புகளில் இருந்தும் பார்த்தால் இந்தியா தன்னை அதிலிருந்து வெகு தொலைவில் நிறுத்திக் கொண்டுள் ளது புரியும். அமைதியின் பக்கம் என்று மட்டும் மோடி தொடர்ந்து கூறி வரும் வேளையில், புதுதில்லி அதன் வரலாற்று உறவுகள் மற்றும் ராணுவ, எரிசக்தி உறவுகளின் அடிப்படையில் மாஸ்கோவின் பக்கமே காணப்பட்டுள்ளது.
பாரபட்சமற்றதாக தன்னை கருதிட அது உறவுகளை மறு பரிசீலனை செய்திட வேண்டும். மோடியின் பயணம் ஒரு பொருட்டல்ல இதற்கிடையில் போர் எவ்வித இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து நீடிக்கிறது. ராணுவ ஆதாயங்களை பெறும் போட்டி இருவரிடமும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஜூலையில் மோடியின் மாஸ்கோ பயணத்திற்கு சற்று முன்பு ரஷ்யா கொடிய தாக்குதலை நடத்தியது. கடந்த வாரம் கீவ் வருகைக்கு முன்னர் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் தாக்குதல்களை நடத்தியது. இந்திய பிரதமர் மோடியின் பயணத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் இது நடந்துள்ளது. சவால்கள் அதிகம் இந்த சிக்கலான சூழ்நிலையில் மோதலை தீர்ப்பதில் ஈடுபட விரும்பும் மற்றவர்களின் வரிசையில் இந்தியாவும் இணைய விரும்பினால் மிக கவனமாகத் தொடர வேண்டும். கருங்கடல் பிராந்திய முன் முயற்சி, ஐஏஇஎஸ் (IAES) முயற்சி, சப்போரி ஷா மின்நிலையத்தில் அணு பாதுகாப்பு மற்றும் ரஷ்யா - உக்ரைன் கைதிகளின் பரிமாற்றம் என வெற்றிகரமான முயற்சிகள் குறைவாகவே இருக்கின்றன.கவனம் செலுத்த வேண்டிய சவால்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்தியா போர் நிறுத்தம் குறித்தான தனது சொந்தக் கொள்கைகளை வெளிப்படுத்த வேண்டும். ஆனால், உக்ரைனும் ரஷ்யாவும் முன் வைத்துள்ள திட்டங்கள் இந்திய அமைதி முயற்சியை மேலும் சிக்கலாக்கும். ஜெலன்ஸ்கி, உக்ரைனிடமிருந்து ரஷ்யா ராணுவத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்கிறார். புடின் உக்ரைன் நேட்டோவில் இணைய முயலும் எந்த ஒரு முயற்சியையும் கைவிட வேண்டும் என்கிறார். வரலாற்றில் இருந்து பாடம் கற்க வேண்டும்! 1950களில் பிரதமர் ஜவஹர்லால் நேரு வியன்னாவில் “ஆஸ்திரிய நடுநிலை”என்ற வாக்குறுதிக்காக சோவியத் தலைவர் குருச்சேவுடன் மத்தியஸ்தம் செய்து போருக்கு பிந்தைய ஆஸ்திரியாவின் வடகிழக்கு பிராந்தியத்திலிருந்து ரஷ்யப் படைகள் திரும்பப்பெறப்பட்டன. மோடி அரசு இந்த வரலாற்றில் இருந்து படிப்பினை பெற்று பயனடையலாம்.
நன்றி : தி இந்து தலையங்கம் 29/8/24 தமிழில் : கடலூர் சுகுமாரன்