states

பத்திரிகையாளர்கள், குடும்ப ஓய்வூதியம் உயர்வு

சென்னை, ஏப்.11- கலைஞர் கருணாநிதி நுாற்றாண்டு  பிறந்த நாள் விழாவையொட்டி, பத்திரி கையாளர் ஓய்வூதியம் மாதம் 10 ஆயி ரம் ரூபாயில் இருந்து, 12 ஆயிரம் ரூபா யாகவும், குடும்ப ஓய்வூதியம், 5,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் செய்தி விளம்பரம் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை ஆகிய மானிய கோரிக் கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது கொள்கை விளக்க குறிப்பை  தாக்கல் செய்த அமைச்சர், “ஆங்கி லேயர்களின் எதேச்சதிகார  சட்டத்தை  எதிர்த்து போராடியதால் 1920ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரமலைக்கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 16 தியாகிகளை கவுரவிக்கும் வகையில், அந்த நிகழ் வின் நூற்றாண்டை குறிக்கும் வகையில்  ரூபாய் 1 கோடியே 47 லட்சத்தில் தியாகி கள் நினைவு மண்டபம் திறக்கப்பட்டது”  என்றார்.

அயோத்திதாசர் பண்டிதரின் 175ஆம் ஆண்டின் நினைவாக அவரது  சமூகப் பணிகளை போற்றும் வகையில்  சென்னை காந்தி மண்டப வளாகத்தில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கும் பணி தற்போது நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. நாட்டின் விடுதலைப் போராட்டத் தில் ஈடுபட்ட தியாகி, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற தென்னிந்தி யாவின் முதல் பெண்மணி, காந்தியடி களால் தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளுக்கு கடலூரிலும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு மயிலாடுதுறையிலும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தி லும் சிலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டப்  பணிகள் நடைபெற்ற போது ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு அங்குள்ள பூங்காவில் 1 கோடி ரூபா யில் நினைவு மண்டபம் மாற்றி அமைக் கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

திரைப்பட விருதுகள்

2015ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் வழங்குவதற்கான நடுவர் குழு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், சின்னத் திரை கலைஞர்களுக்கும் 2014ஆம்  ஆண்டு முதல் 22ஆம் ஆண்டுகளுக் கான சின்னத்திரை விருதுகள் வழங்கு வதற்கான பணிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகிறது என்றார். பிறகு புதிய அறிவிப்புகளை வெளி யிடுகையில், “சென்னையில் ரூ. 5 கோடி யில், திராவிட இயக்க சரித்திர நிகழ்வுகளை தாங்கி, திராவிட இயக்க தீரர்கள் கோட்டம் அமைக்கப்படும். வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் 1976ஆம் ஆண்டு வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட்டது. கலையழகும் கம்பீர மும் கொண்ட சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழும் வள்ளுவர் கோட்டம் 80 கோடி ரூபாய்  செலவில் உலகத் தரம் வாய்ந்த அளவில் புனரமைப்பு பணிகள் மேற் கொள்ளப்படும்.

காமராஜர் - சவுந்தரராஜனுக்கு சிலை

கோவை மாவட்டம், பொள்ளாச்சி யில், பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் நிறைவேறக் காரணமாக இருந்த காமராஜருக்கு 50 லட்சம் ரூபாயில் உருவச்சிலை அமைக்கப்படும். பிரபல பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந் தரராஜனின் புகழை சிறப்பிக்கும் வகையில் மதுரை மாநகரில் ரூபாய் 50 லட்சம் செலவில் திருவுருவச் சிலை  அமைக்கப்படும். வேலூர் மாவட்டம், குடியாத் தத்தில், தியாகி தங்கோவுக்கு, 50  லட்சம் ரூபாய் செலவில் உருவச்சிலை;  நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில், 20 லட்சம்  ரூபாய் செலவில், அவரது மார்பளவு சிலை அமைக்கப்படும். ஈரோடு மாவட்டம், சென்னிமலை யில், 3 கோடி ரூபாயில், கொடிகாத்த குமரன் உருவச் சிலையுடன் கூடிய அரங்கம் ஒன்று கட்டப்படும். அரிய லுார் மாவட்டத்தில், இந்தி திணிப்பை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்த, கீழப்பழுவூர் சின்னசாமிக்கு, 3 கோடி ரூபாயில் அரங்கம் அமைக்கப்படும். 150 கோடியில் திரைப்பட நகரம்! சென்னை அருகே, 150 கோடி ரூபாயில், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும். அரசு எம்ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவனத்தில் படிக்கும்  மாணவர்களின் குறும்பட தயாரிப்பு செலவுத் தொகை 50 ஆயிரம் ரூபாயில்  இருந்து, 1 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.