சென்னை,டிச.16- ஆவின் நெய் லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்துவதாக நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி 1 லிட்டர் ப்ரீமியம் நெய் ரூ.630 லிருந்து ரூ.680 ஆகவும், அரை லிட்டர் நெய் ரூ.340 லிருந்து ரூ.365 ஆகவும் உயர்ந் துள்ளது. இந்த விலை உயர்வு வெள்ளிக் கிழமை (டிச.16) முதல் அமலுக்க வருவ தாக அனைத்து ஒன்றியங்களின் பொது மேலாளர்களுக்கும் நிர்வாக இயக்கு நர் சுப்பையன் ஐஏஎஸ் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். இந்த நிலையில் புதிய விலை அமல்படுத்தப்பட்டுள் ளது. கடந்த 9 மாதங்களில் 3வது முறை யாக ஆவின் நெய் விலை உயர்த்தப் பட்டுள்ளது.