states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. “டைட்டானிக்” திரைப் பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் டிசம்பர் 16-ஆம் தேதி வெளியாகிய அவ தார் படத்தின் 2-ஆம் பாகம் 5 நாட்களில் ரூ.4,000 கோடி வசூலை நெருங்கியுள்ளது. இந்தி யாவில் 5 நாட்களில் ரூ. 200 கோடி வசூலாகி யுள்ளது.
  2. சீனாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப் படும் “ஒமைக்ரான் பிஎப் 7” என்ற உருமாறிய கொ ரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்தில் 2 பேருக் கும், ஒடிசாவில் ஒரு வருக்கும்  பாதிப்பு உறுதி யாகியுள்ளது.
  3. தெற்கு ரயில்வேயில் 964 பணியிடங்களில் 80% வடஇந்தியர்களுக்கே தாரை வார்க்கப்பட்டுள் ளது. ரயில்வே துறையில் தமிழர்கள் விரல் விட்டு  எண்ணக்கூடிய அள விலேயே தேர்வாகி இருப்பது அதிர்ச்சி அளிக் கிறது. இதனால் தமிழ் நாட்டில் ஒன்றிய அரசு  துறைகளில் வடமாநிலத் தவர்கள் திட்டமிட்டு திணிக்கப்படுகிறார்களோ என ஐயம் ஏற்படுகிறது  என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள் ளார்.
  4. மணிப்பூரின் நானி மாவட்டத்தின் கோபும் என்ற பகுதியில் பள்ளி மாணவ-மாணவிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா சென்ற பேருந்து பழைய கச்சார் சாலையில் விபத் தில் சிக்கியதில் 7 மாண விகள் உயிரிழந்தனர்.
  5. கடந்த 7 மாதங்களாக கொரோனா உயிரிழப்பு இல்லாத ஒரே மாநிலம்  தமிழ்நாடு தான் என  அமைச்சர் மா.சுப்பிர மணியன் தகவல் தெரி வித்துள்ளார்.
  6. தனது மகன் ரவீந்திர நாத்துக்கு ஒன்றிய அமை ச்சர் பதவி கிடைக்காமல் எடப்பாடி பழனிச்சாமி தடுத்ததாக ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டி யுள்ள நிலையில், தைரி யம் இருந்தால் ஓ.பன் னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்கட்டும் என எடப் பாடி பழனிச்சாமி சவால் விடுத்துள்ளார்.
  7. 2022 நவம்பர் வரை நாடு  முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகளில் 83% ரயில்வே பாதைகள் மின் மயமாக மாற்றப்பட்டுள் ளது. ரயில்வே மின் தேவையை பூர்த்தி செய்ய  143 மெகாவாட் சூரிய  ஒளி மின் நிலையங்கள், 103 மெகாவாட் காற்றா லை மின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக  ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
  8. தமிழ்நாட்டில் உள்ள பசுமை வனப்பரப்பை 28  சதவிகிதத்தில் இருந்து 33 சதவிகிதமாக உயர்த்து வதற்கான பணிகள் தீவிர மாக நடைபெற்று வரு கின்றன. அதில் ஒரு பகுதி யாக திண்டுக்கல் மாவட் டம் ஒட்டன் சத்திரம் அரு கே உள்ள இடையன் கோட்டையில் அமைச்சர் சக்கரபாணி ஏற்பாட்டில் 117 ஏக்கர் பரப்பளவில் 6 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்யப் பட்டுள்ளது.