முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானம் - ஏகமனதாக நிறைவேற்றியது சட்டப்பேரவை
சென்னை, ஜன.12- தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்ட அரசினர் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதர வுடன் சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழனன்று(12) கேள்வி நேரத்திற்கு பிறகு, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்ட த்தை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார். அதன் விவரம் வருமாறு:- 1860 ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாயில் கமாண்டர் டைலர் என்பவரால் உரு வாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது. அதன்பிறகு 1955-இல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ஏ. இராமசாமி முத லியார் குழு, 1963 இல் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம், 1964 இல் அமைக்கப்பட்ட டாக்டர் நாகேந்திரசிங், ஐ.சி.எஸ் தலைமையிலான உயர்நிலைக் குழு ஆகிய பொறியியல் வல்லுநர்களால் பல்வேறு ஆண்டு காலம் ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டதுதான் சேதுக் கால்வாய் திட்டமாகும். இதன் வழித்தடங் கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன. இறுதி செய்த திட்டம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி யின் போது பிரதமராக இருந்த வாஜ்பாய், சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் அனுமதியளித்தார். அப்போது தான் சேதுக் கால்வாய் திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப் பட்டது. பின்னர் ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது.
அடிக்கல் நாட்டு விழா
திமுக பங்கேற்றிருந்த ஐ.மு.கூட்டணி அரசின் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் 2004 ஆம் ஆண்டு ரூ.2,427 கோடியில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது. கலைஞர், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவராக இருந்த சோனியா காந்தி முன்னிலை வகிக்க இந்தத் திட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் 2.7.2005 அன்று துவக்கி வைத்தார். திட்டப் பணிகள் நடை பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தலை நிமிர வைக்கும் இத்திட்டத்துக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களைச் செழிக்க வைக்கக்கூடிய இந்தத் திட்டத் துக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இந்த சேது கால்வாய் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப் பட்டது.
தமிழ்நாட்டின் வளர்ச்சி தடை!
எந்தக் காரணத்தைக் கூறி முட்டுக் கட்டை போடப்பட்டதோ, அதையே நிரா கரிக்கக்கூடிய வகையிலே, தற் போது “இராமேஸ்வரம் கடற்பகுதி யில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதைக் கூறுவது கடினம்” என்று ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் சொல்லியிருக் கிறார். இப்படி ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலையில், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை இனியும் நிறை வேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு - வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடும் நிகழ்வாகவே கருதி, இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது.
வளர்ச்சிக்கு எதிரானது
இனியும் இந்தத் திட்டத்தைச் செயல் படுத்தவிடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது. எனவே, மேலும் தாமதமின்றி இந்த முக்கிய மான சேது சமுத்திரத் திட்டத்தை நிறை வேற்றிட, ஒன்றிய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்றும், இத்திட்டத் தைச் செயல்படுத்து வதற்காக தமிழ் நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என்றும் இந்த மாமன்றம் ஒரு மனதாகத் தீர்மானிக்கிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. எனவே, இந்த தீர்மானத்தை அனை வரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டதையடுத்து அதிமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, பாமக, விசிக, மதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் குரல் வாக்கெடுப்பு மூலம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியது.
வளர்ச்சியைத் தடுத்த அதிமுக - பாஜக
கே.பாலகிருஷ்ணன் சாடல்
“சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இத்தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. சேதுக் கால்வாய் திட்டம் குறித்து 146 ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அந்த திட்டத்தைச் செயல்படுத்த நிதி ஒதுக்கி, பணிகள் தொடங்கும்போதுதான் அதிமுகவும், பாஜகவும் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அதைத் தடுத்தனர். அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு இருந்தால் தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய வேலை வாய்ப்பு உருவாகியிருக்கும். மேலும் பல வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கும். தற்போது நாடாளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அங்கு ‘ராமர் பாலம்’ இருந்ததற்கான விஞ்ஞானப் பூர்வமான, வரலாற்றுப் பூர்வமான எந்த ஆதாரமும், ஆவணங்களும் இல்லை என்று தெரிவித்துள்ளார். அப்படியிருக்கும் போது அந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டியதுதானே. அதில் என்ன பிரச்சனை இருக்கிறது? எனவே ஒன்றிய அரசு உடனடியாக அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
சென்னையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டியிலிருந்து...