சென்னை,மே 20- மாசு கட்டுப்பாட்டு நிதியை மற்ற பணிகளுக்கு பயன்படுத்திய முந்தைய அதிமுக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு: 2018 ஆம் ஆண்டு முதல் 2020-21 ஆம் ஆண்டு வரை, ஆண்டுக்கு இருமுறை தலா ரூ. 90 கோடி வீதம் சென்னை, பெருநகர பகுதிக்குள் மாசுக்கட்டுப்பாட்டிற்காக ஒன்றிய அரசு ரூ.180 கோடி அளித்து வந்திருக் கிறது. இந்த நிதியை கடந்த அஇஅதிமுக அரசாங்கம் முழுக்க, முழுக்க சாலை மற்றும் வடிகால் அமைப்பதற்காகவே பயன்படுத்திய தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பருவ நிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் நுரையீரல் நோய்கள் ஆகியவற்றின் பின்னணி யில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது மிகுந்த முக்கி யத்துவம் உள்ளதாக மாறியிருக் கிறது. தமிழகத்தில் காற்று மாசுபாடு கட்டுப்பாட்டு தரத்தை சென்னை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்கள் அடையவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. இந்த கார ணத்தினால் குழந்தைகள், முதி யோர், உடல்நிலை பாதிக்கப் பட்டோர் மிகுந்த பாதிப்புக்குள்ளா கின்றனர். இதனால் மருத்துவ கட்ட மைப்புகள் மீது அழுத்தம் ஏற்படு வதோடு தனிநபர் மற்றும் குடும்பங் களின் மருத்துவச் செலவுகளும் அதி கரிக்கின்றன. காற்றில் கலந்துள்ள நுண்துகள்களை கட்டுப்படுத்தவும், பசுங்கூட வாயுக்களை குறைக்க வும், சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் முந்தைய அஇஅதி முக அரசு இந்நிதியை மாசுக்கட்டுப் பாட்டிற்கு பயன்படுத்தாமல் இதர பணிகளுக்கு பயன்படுத்தியது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது;
கண்டிக்கத்தக்கது. மக்களின் உடல்நிலை, சுற்றுச்சூழல் ஆகியவற்றை புறக்கணிக்கும் செயலாகும். எனவே, இந்த நிதியை நான்காண்டுகளாக முறையாக பயன்படுத்தாத அதிகாரிகளுக்கு உரிய முறையில் அறிவுறுத்தல் அளிப்பதோடு, எதிர்காலத்தில் இத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டு மெனவும், நாளுக்கு நாள் மோச மடைந்து வரும் காற்று மாசுத் தன்மையை கட்டுப்படுத்திட உறுதி யான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.