மதுரை, மார்ச் 21- பீகார் மாநிலத் தொழிலா ளர்கள் தமிழகத்தில் தாக்கப்படு வது போன்று போலி வீடியோ வெளியிட்ட தில்லி பாஜக பிர முகருக்கு உயர்நீதிமன்றம் நிபந்த னையுடன் முன்ஜாமீன் வழங்கி யது. தமிழகத்தில் பீகார் உள்ளிட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இது தொடர்பாக தமி ழக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்தி வீடியோவை வெளி யிட்டது தில்லியை சேர்ந்த பாஜக பிரமுகர் பிரசாந்த்குமார் உம்ராவ் என தெரியவந்தது. பாஜக பிரமுக ரின் இந்த இழிவான செயலை அர சியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் கடு மையாக கண்டித்தனர். போலி வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகர் மீது தூத்துக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க பிரசாந்த் குமார் உம்ராவ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது கடந்த வியா ழனன்று நடைபெற்ற விசாரணை யில், இவருக்கு முன் ஜாமீன் வழங் கக்கூடாது என்று தமிழக அரசின் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரி வித்தார்.
இதனைத்தொடர்ந்து நீதிபதி, மனுதாரர் வழக்கறிஞரிடம் சரமாரி யான கேள்விகளை எழுப்பினார். பாஜக பிரமுகருக்கு சமூகப் பொறுப்பு இல்லையா..? ஒவ் வோரு நபருக்கும் சமூக பொறுப்பு வேண்டும் என்று தெரி வித்து, வழக்கு தீர்ப்புக்காக ஒத்தி வைத்தார். இந்த வழக்கில் மார்ச் 21 செவ்வாயன்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பிரசாத் உம்ராவ் குமாருக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும். 15 நாட்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலை யத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும்.மனுதாரர் இது போன்ற வேறு ஏதும் குற்றச்சம்ப வத்தில் ஈடுபட்டால் முன் ஜாமீனை ரத்து செய்து உடனடியாக காவல் துறையினர் அவரை கைது செய்ய லாம் என்று உத்தரவிட்டுள்ளார்.