புதுதில்லி, ஜூன் 19- அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்தத் திட்டம் இராணுவத்தில் ஆர்எஸ்எஸ்-அமைப் பில் உள்ள இளைஞர்களை திணித்து நாட்டின் இராணுவக் கட்டமைப்பையே காவிமயமாக்குவதுதான் ஒன்றிய பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் பிரதான நோக்கம். இந்தநிலையில் பேராடும் இளை ஞர்களுக்கு காங்கிரஸ் பொதுச்செய லாளர பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், “உங்களை விட பெரிய தேசபக்தர் இல்லை. போலி தேசியவாதிகள் மற்றும் போலி தேச பக்தர்களை அடையாளம் காணுங்கள். இது தான் அரசின் நோக்கம் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், ஹரிவன்ஷ் ராய் பச்சனின் ‘அக்னிபாத்’ என்ற இந்திக் கவிதையின் வரிகள் இந்தத் திட்டத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. “இளை ஞரை அழிக்கும் திட்டத்திற்கு கவிதை யின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ராணுவத்தை அழிக்கும். ஜனநாயக வழியில் போராடுங்கள். அதன் மூலம் அரசாங்கத்தை வீழ்த்துங்கள். உண்மையான தேசபக்தி யை வெளிப்படுத்தும் அரசு நாட்டில் அமைய வேண்டும் என பிரியங்கா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிறன்று முப்படைகளின் அதிகாரிகளை சந்தித்து தங்களது “ இராணுவ காவிமய மாக்கல் நடவடிக்கை” குறித்து ஆலோசனை நடத்தினார்.
பாஜக-வின் கிரிமினல் வேலை
2024-நாடாளுமன்றத் தேர்தலை யொட்டி மோடி அரசின் மோசடி வேலை அம்பலம். இராணுவத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகள் இதைப்பற்றி கவலைப்படாமல் இருந்த மோடி அரசு இராணுவத்தில் காவி களை நிலை நிறுத்த மேற்கொண்டுள்ள முயற்சியே அக்னிபாத் திட்டம் மார்ச் 1-ஆம் தேதி கணக்கீடு ஒன்றிய அரசு ஊழியர் சிவில் மத்திய காவல் படைகள் மொத்தம்
2006 4.17 0.56 4.7
2007 4.37 0.65 5
2008 4.45 0.5 5
2009 4.57 0.49 5.1
2010 5.34 0.92 6.3
2011 5.82 0.93 6.7
2012 6 0.84 6.8
2013 6.02 0.69 6.7
2014 4.22 0.53 4.7
2015 4.21 0.43 4.6
2016 4.13 0.56 4.7
2018 6.87 0.56 7.4
2019 9.22 0.92 10.1
2020 8.87 1.11 10
அனைத்துக் காலிப்பணியிடங் களையும் நிரப்புவதற்கு பதில் இராணு வத்தை காண்ட்ராக்ட் முறைக்கு தள்ளு வது ஒரு கிரிமினல் நடவடிக்கையே!