states

தீக்கதிர் விரைவு செய்திகள்

‘ஓபிஎஸ் விரைந்து நலம்பெற விழைகிறேன்’:  முதல்வர்

சென்னை,ஜூலை 16-  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் விரைந்து நலம் பெற விழை கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிமுக ஒருங்கி ணைப்பாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் விரைந்து முழுமை யாக நலம்பெற விழைகிறேன்” என்று தெரி வித்துள்ளார். 

சென்னையில் குரங்கு அம்மை  சிறப்பு வார்டு தயார்

சென்னை,ஜூலை 16- சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்து வமனையில் குரங்கு அம்மைக்கு 10 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பி ரமணியன் தெரிவித்தார். சென்னை பன்னாட்டு விமான நிலை யத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சனிக்கிழமை யன்று(ஜூலை 16) பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “சென்னை ,மதுரை கோவை திருச்சி பன்னாட்டு விமான நிலை யங்களில் 2 விழுக்காடு நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படு கிறது. காய்ச்சல் , குரங்கம்மைக்கு சேர்த்து பரிசோதனை சேர்த்து பரிசோதனை செய்யப்படுகிறது. பதிப்பு அதிகம் கொண்ட குறிப்பிட்ட நாட்டில் இருந்து வருவோரில் முகம் கையில் கொப்பளம் இருக்கா என ஆய்வு செய்யப்படுகிறது” என்றார். குரங்கு அம்மைக்கு சென்னையில் ஒரு ஆய்வகம் அமைக்க ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். சென்னை யில் குரங்கம்மைக்கு ஒரு சிறப்பு வார்டு 10 படுக்கையுடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தயாராகியுள்ளது. தமிழகத்தில் மாவட்ட அலுவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் பாதுகாப்பாக வே இருக்கிறது, இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை அறிகுறி இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,ஜூலை 16- தமிழகத்தில் நீலகிரி, கோவை (மலைப்பகுதிகள்), தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் ஒருசில இடங்க ளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  நீலகிரி, கோவை (மலைப்பகுதிகள்), தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவ ட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூலை 19, 20 ஆகிய தேதிகளின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

ஒகேனக்கலில்  நீர்வரத்து அதிகரிப்பு!

தருமபுரி, ஜூலை 16- கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர்கனமழையின் காரணமாக, கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணை களில் இருந்து உபரி நீர் தொடர்ந்து வெளி யேற்றப்பட்டு வருகிறது. கிருஷ்ண ராஜசாகர் அணையிலிருந்து 85ஆயிரத்து 177 கனஅடி நீரும்; கபினி அணையிலி ருந்து 35 ஆயிரம் கனஅடி நீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.  காவிரி கரையோரப்பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஒகே னக்கலுக்கு 3ஆவது நாளாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து ஒரு லட்சத்து 20ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் பகுதி வெள்ள மாக காட்சியளிக்கப்படுகிறது. ஒகேனக்கல் பகுதியை ஒட்டியுள்ள தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் வருவாய்த்துறை மூலம் அறிவுறுத்தியுள்ளது. ஒகேனக்கலில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க ஆறா வது நாளாக தடை தொடர்கிறது. ஒகேனக்கல் பகுதியில் அருவிகளை மூழ் கடித்து தண்ணீர் பரந்து விரிந்து செல்கிறது.

உலகச் செய்திகள்

ஊதியத்துடன் விளையாடாதீர்!

லண்டன், ஜூலை 16- நாடு முழுவதும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள பணவீக்கத் தைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெய ரில் தனியார் துறையில் பணியாற்றும் ஊழி யர்களின் ஊதியத்தைக் கட்டுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. நெருக்கடியான காலகட்டத்தில் தொழி லாளர்களின் ஊதியத்தில் கை வைப்ப தால் அதிருப்தியான கோடைக்காலமாக மாறும் என்று பிரிட்டனின் மிகப்பெரிய தனியார் துறை தொழிலாளர்களின் தொழிற் சங்கமான யுனைட் எச்சரித்துள்ளது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாள ரான ஷரோன் கிரகாம், “ஆண்டாண்டு கால மாக அதிருப்தியான காலகட்டத்தையே தொழிலாளர்கள் சந்தித்து வருகிறார்கள். பணவீக்கத்திற்காக தொழிலாளர்கள் சுமையை ஏற்க வேண்டும் என்றால், ஆயி ரக்கணக்கான தொழிலாளர்கள் நெருக்க டியை எதிர்நோக்க வேண்டியிருக்கும்” என்று குறிப்பிட்டார்.

வளரும் ஒற்றுமை

ஹவானா, ஜூலை 16- இருதரப்பு உறவுகள், குறிப்பாக வர்த்தகத்தை மேம்படுத்த கியூபாவின் தலைநகர் ஹவானாவில் வர்த்தகக் கழகம் ஒன்றை கியூபாவும், மெக்சிகோவும் உரு வாக்கியுள்ளன. இதற்கான தொடக்க நிகழ்வில் கியூபா வின் ஜனாதிபதி மிகேல் டியாஸ் கானல், பிரதமர் மானுவல் மரேரோ மற்றும் பல்வேறு கியூப அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கியூபாவில் இயங்கும் 150 நிறுவனங்கள் மற்றும் மெக்சிகோவில் இயங்கும் 80 நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த கியூப-மெக்சிகோ வர்த்தக்கழகத் தொடக்க விழாவில் பங்கேற்கிறார்கள். மெக்சிகோவில் இருந்து வர்த்தகத்துறை அதிகாரியான ஹெக்டர் குர்ரேரோ கலந்து கொண்டு பேச விருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டு காலப் பின்னடைவில் இருந்து மீளும் முயற்சி களைத் தொடர்கிறோம் என்று கியூபா வின் துணை ஜனாதிபதி ரிகார்டோ காப்ரிசாஸ் தெரிவித்துள்ளார். 

பிரிட்டனில் போரிஸ் ஜான்ச னுக்கு அடுத்து யார் பிரதமர் என்பதைத் தேர்வு செய்யும் பணியை ஆளும்கட்சி மேற் கொண்டு வருகிறது. ஐந்து பேர் தற்போது களத்தில் இருக்கிறார் கள். ஞாயிறன்று நடைபெறும் தொலைக்காட்சி விவாதத்திற் குப் பிறகு இரண்டு வேட்பாளரா கக் குறையும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ரிஷி சுனாக்கிற்கு அதிக ஆதரவு  இருந்தபோதிலும், கட்சி உறுப்பி னர்களில் பெரும்பாலானோர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பென்னி மோர்டான் ட்டை ஆதரிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. 

சர்வதேசச் சந்தையில் பெட் ரோல் மற்றும் டீசல் விலை கள் குறைந்துள்ளதால் பல நாடு களிலும் விலைக் குறைப்பு நட வடிக்கைகள் நடந்து வருகின் றன. பத்து விழுக்காட்டிற்கும் மேல் எரிபொருள் விலையில் வெட்டு என்று வியட்நாம் அரசு அறிவித்திருக்கிறது. பெருந் தொற்றுப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு இந்த விலைக் குறைப்பு நடவடிக்கை பெரும்  அளவில் உதவும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எரிபொருள் விலைக்குறைப்பு பிற பொருட்க ளின் விலைகள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது.

மேற்கு ஆசிய நாடுகள் எந்த நாட்டிற்கும் புழக்கடை யல்ல என்று சீனா கடுமையாக விமர்சித்துள்ளது. தனது ஆணைக்கு இணங்காத நாடுக ளில் ஆட்சியைக் கவிழ்ப்பது மற்றும் குழப்பங்களை விளை விப்பது என்று அமெரிக்கா இயங்கி வருகிறது. அது தங்க ளின் உரிமை என்பதுபோன்று ஜோ பைடன் உள்ளிட்டோர் பேசி வருகிறார்கள். இதுபோன்ற கருத்துக்களை தற்போது மேற்கு ஆசியாவில் பயணம் மேற் கொண்டு வரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேசிய தைக் கண்டித்தே சீனா இவ்வாறு கண்டனம் தெரிவித்திருக்கிறது.