சென்னை, மே 11- தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ பாடுபடுவேன் என்று அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தெரிவித்தி ருக்கிறார். தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத் தில், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜ னுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும். பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு திருத்தப்பட்ட பட் ஜெட்டையும் (2021 - 22), பெருந் தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டு பட்ஜெட்டுகளையும் (2022 - 23, 23 - 24) சமர்ப்பித்துள்ளேன். முந்தைய ஆட்சி யின் விளைவாக உச்சபட்ச பற்றாக் குறை மற்றும் கடன் விகிதங்களைப் பெற்றிருந்த போதிலும், நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூக நலத் திட்டங்களிலும், மூலதனச் செல வினங்களிலும் முதலீடு செய்துள் ளோம்.
இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான பகுதியாகக் கருதுகிறேன். நிதி ஆதாரங்களை வலுப்படுத்து தல் மற்றும் சமூக நல செலவினங்கள் ஆகியவை சமத்துவ சமுதாயத்திற்கு அவசியமான படிகள் என்றாலும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உந்து சக்தியாக விளங்குவது முதலீ டுகள், நிறுவன விரிவாக்கம் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவைகளே ஆகும். உலகளவில் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கு வதற்கான நம்பர் ஒன் துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலக்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின், எனக்குத் தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன். தொழில்நுட்பமே எதிர்காலத்தை வடிவமைக்கிறது. இத்துறையில் கூடுதல் முதலீடு களை ஈர்ப்பதற்கும், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கத்தை விரைவு ப்படுத்துவதற்கும், தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழ்நாட்டை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்ட மிட்டுள்ளேன். 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்னோடியான உலகளாவிய திறன் மையத்தை நிறுவி நிருவகித்ததன் மூலம் நான் பெற்ற சொந்த அனு பவமும், எனது தொழில் வாழ்வில் பெற்ற தொழில்துறையுடனான தொடர்புகளும் இந்த அமைச்சகப் பொறுப்பில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பயனளிக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.